NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 85: இஸ்ரேல் தாக்குதலில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 85: இஸ்ரேல் தாக்குதலில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் பலி

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 85: இஸ்ரேல் தாக்குதலில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் பலி

    எழுதியவர் Srinath r
    Dec 30, 2023
    11:36 am

    செய்தி முன்னோட்டம்

    காசா மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான்வெளி தாக்குதலில், 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அக்டோபர் 7, ஹமாஸ் அமைப்பின் இஸ்ரேல் மீதான திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பின், இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே போர் மூண்டது.

    85வது நாளாக போர் நடந்து வரும் நிலையில், காசா நகரத்தின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் நோக்கோடு, இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை மேற்கொண்டுவருகிறது.

    தற்போது மேலும் தெற்கு நோக்கி முன்னேறும் நோக்கோடு இஸ்ரேல், கான் யுனிஸ் நகரில் குண்டு மழைபொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    காசா நகரின் 1% மக்கள் போரில் உயிரிழப்பு

    24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் மேலும் 187 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் காசாவின் பலி எண்ணிக்கை 21,507 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    போரில் கொல்லப்பட்டவர்கள் காசா நகரின் மொத்த மக்கள் தொகையில் 1% என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் மீட்கப்படாமல் சிக்கி உள்ளது.

    போர் ஏற்படுத்திய கடினமான விளைவுகளால், காசாவின் கிட்டத்தட்ட அனைத்து 2.3 மில்லியன் மக்களும் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.

    3rd xard

    காசாவிற்கு தடுப்பூசிகளை வழங்க இஸ்ரேல் உதவி

    போலியோ, காசநோய், ஹெபடைடிஸ், டிப்தீரியா, டெட்டனஸ், இருமல் மற்றும் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக 1.4 மில்லியன் மக்களை பாதுகாக்கும் வகையில், 49,130 ​ டோஸ் தடுப்பூசிகளை காசாவிற்குள் செல்ல உதவியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    தடுப்பூசி பரிமாற்றம் யுனிசெஃப்யால் ஒருங்கிணைக்கப்பட்டது.

    காசா வெளியில் இருந்து வரும் உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்களையே முழுவதும் நம்பியுள்ளது.

    மேலும் சர்வதேச ஏஜென்சிகள் இஸ்ரேலிய ஆய்வுகள் மூலம் பொருட்கள் அனுமதிக்கப்படுவது, காசாவின் பரந்த தேவைகளில் ஒரு சிறிய பகுதியே பூர்த்தி செய்கிறது என்று குற்றம் சாட்டுகின்றன.

    ஆனால் இஸ்ரேல், காசாவிற்கு சொல்லும் எந்த விதமான உதவி பொருட்களையும் தடுக்கவில்லை எனவும், காசாவிற்குள் அதன் விநியோகத்தில் பிரச்சனை இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    காசா
    ஹமாஸ்

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல் ஹமாஸ் போர்- இறுதி நாள் போர் நிறுத்தத்தில் 16 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முடிவு இஸ்ரேல்
    காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் முயற்சி இஸ்ரேல்
    முடிவுக்கு வந்தது ஏழு நாள் போர் நிறுத்தம்- மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் ஹமாஸ் போர் இஸ்ரேல்

    இஸ்ரேல்

    போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்த கத்தார், போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன் அமெரிக்கா
    போர் தொடங்கியதிலிருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்- கான் யூனிஸ் மக்கள் தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: 24 மணி நேரத்தில் 700 பாலஸ்தீனியர்கள் பலி இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    தாய்லாந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 25 பணயக் கைதிகளை, விடுதலை செய்தது ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    நெதன்யாகு, மஸ்க் அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் பகுதிக்கு வருகை எலான் மஸ்க்

    ஹமாஸ்

    பாலஸ்தீனை சேர்ந்த 6 பெண்கள் மற்றும் 33 சிறுவர்களை இஸ்ரேல் விடுவித்தது பாலஸ்தீனம்
    காசா போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்தார் அமெரிக்க அதிபர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் 11 பிணயக்கைதிகள் விடுவிப்பு இஸ்ரேல்
    இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு இந்த வாரம் பயணிக்கிறார் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025