NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மியான்மர் நிலநடுக்கத்தில் தொடரும் மீட்பு பணி, இறப்பு 2,000 ஐ நெருங்குகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மியான்மர் நிலநடுக்கத்தில் தொடரும் மீட்பு பணி, இறப்பு 2,000 ஐ நெருங்குகிறது
    மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்

    மியான்மர் நிலநடுக்கத்தில் தொடரும் மீட்பு பணி, இறப்பு 2,000 ஐ நெருங்குகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 31, 2025
    10:51 am

    செய்தி முன்னோட்டம்

    மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலநடுக்கத்தில் இதுவரை சுமார் 2,000 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

    அதே நேரத்தில் மண்டலே நகரில் உள்ள கிரேட் வால் ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதாக சீன அரசு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

    வெள்ளிக்கிழமை மியான்மரில் பெரும் அழிவையும் அண்டை நாடான தாய்லாந்தில் சேதத்தையும் ஏற்படுத்திய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் மண்டலே உள்ளது.

    தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில், இடிந்து விழுந்த கட்டுமான இடிபாடுகளுக்குள் புதைந்திருப்பதாக நம்பப்படும் 76 பேரைத் தேடும் பணியை அவசரக் குழுவினர் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கினர்.

    நிவாரணம்

    அதிகரிக்கும் பாதிப்புகள், நிவாரணம் வழங்கும் உலக நாடுகள்

    நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 18 ஆக இருந்த தாய்லாந்தின் இறப்பு எண்ணிக்கை இன்று அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    அதே நேரத்தில், மியான்மரில், குறைந்தது 1,700 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

    எனினும் மியான்மரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,028 ஐ எட்டியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

    மத்திய மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 23,000 பேருக்கு நிவாரணப் பொருட்களை விரைந்து அனுப்பி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    மியான்மரின் அண்டை நாடுகளான இந்தியா, சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ரஷ்யாவிலிருந்தும் உதவி மற்றும் பணியாளர்களுடன் நிவாரணப் பொருட்கள் மற்றும் குழுக்கள் அனுப்பியுள்ளன.

    அமெரிக்கா 2 மில்லியன் டாலர் உதவியை உறுதியளித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிலநடுக்கம்
    தாய்லாந்து

    சமீபத்திய

    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்

    நிலநடுக்கம்

    பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் கர்ப்பிணிப் பெண் பலி, நான்கு பேர் காயம் பிலிப்பைன்ஸ்
    செங்கல்பட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் - பீதியடைந்த மக்கள்  செங்கல்பட்டு
    சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 110க்கும் மேற்பட்டோர் பலி சீனா
    கூகுளின் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை வழங்கும் வசதியைப் பயன்படுத்துவது எப்படி? கூகுள்

    தாய்லாந்து

    சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள்  தமிழக அரசு
    அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்? உலகம்
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர் தமிழ்நாடு
    தாய்லாந்தில் இன்று தொடங்குகிறது கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025