NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அக்டோபர் 7ஆம் தேதி மாலத்தீவு அதிபர் இந்தியா வர உள்ளதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அக்டோபர் 7ஆம் தேதி மாலத்தீவு அதிபர் இந்தியா வர உள்ளதாக தகவல்
    அக்டோபர் 7ஆம் தேதி இந்தியா வருகிறார் மாலத்தீவு அதிபர்

    அக்டோபர் 7ஆம் தேதி மாலத்தீவு அதிபர் இந்தியா வர உள்ளதாக தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 04, 2024
    03:23 pm

    செய்தி முன்னோட்டம்

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இருதரப்பு பயணமாக அக்டோபர் 7ஆம் தேதி இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஏஎன்ஐ வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜூன் 9ஆம் தேதி டெல்லிக்கு வந்த முகமது முய்சுவின் இரண்டாவது இந்திய பயணமாக இது இருக்கும்.

    முன்னதாக, கடந்த செப்டம்பர் 10 அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களுக்காக ஜனவரி மாதம் இடைநீக்கம் செய்யப்பட்ட மாலத்தீவின் இரண்டு ஜூனியர் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து ராஜினாமா செய்த ஒரு நாளில், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது.

    இரு நாட்டு தலைவர்களுக்கும் ஏற்ற வகையில் தேதி முடிவு செய்யப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

    சீனா ஆதரவு

    சீனாவுக்கு ஆதரவான முகமது முய்சு

    மாலத்தீவில் இந்தியாவை வெளியேற்றுவோம் என்ற பிரச்சாரத்தை முன்வைத்து அதிபரான முகமது முய்சு சீன ஆதரவு நபராக அறியப்படுகிறார்.

    வழக்கமாக மாலத்தீவில் அதிபராக பதவியேற்பவர்கள் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வருவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், அதை மாற்றி முதலில் துருக்கிக்கும், சீனாவுக்கும் சென்றுவிட்டு, பின்னர் அவர் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.

    எனினும், தனது முந்தைய இந்தியாவை வெளியேற்றும் பிரச்சாரத்திலிருந்து பின்வாங்கிய முகமது முய்சு, செப்டம்பர் இறுதியில், அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேசும்போது, இந்தியா அவுட் கொள்கையை கடைபிடிக்கவில்லை என மறுத்தார்.

    வெளிநாட்டு ராணுவம் தங்கள் மண்ணில் இருப்பதால் மாலத்தீவு பல பிரச்சினைகளை எதிர்கொண்டதால்தான் ராணுவத்தை விலக்குமாறு கோரினோம் என அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தார்.

    உறவுகள்

    இந்தியா-மாலத்தீவு உறவுகள்

    மாலத்தீவு அதிபராக கடந்த ஆண்டு நவம்பரில் முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    அவர் சத்தியப்பிரமாணம் செய்த சில மணி நேரங்களுக்குள், மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களை நிர்வகிக்கும் இந்திய இராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கோரினார்.

    இதையடுத்து இந்தியர்கள் பலரும் மாலத்தீவுக்கான சுற்றுலா திட்டங்களை ரத்து செய்தனர். இது பொருளாதார ரீதியாக மாலத்தீவுக்கு நெருக்கடி கொடுத்தது.

    மேலும், இந்தியா லட்சத்தீவுகளை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்றும் முயற்சியையும் தொடங்கியது.

    எனினும், 2024 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்ற நிகழ்வில் பங்கேற்க முகமது முய்சுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பிறகு நிலைமை தற்போது மேம்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லட்சத்தீவு
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    இந்தியா

    Mpox கிளேட் 1 பி வழக்கு: மத்திய அரசு வெளியிட்ட நடைமுறைகள் குரங்கம்மை
    அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதாக பிரம்மோஸ் நிறுவனம் அறிவிப்பு தொழில்நுட்பம்
    போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்துள்ளீர்களா? அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள் நிதித்துறை
    நாடு முழுவதும் 1 லட்சம் மெக்கானிக்களுக்கு பயிற்சியளிக்க ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் திட்டம் ஓலா

    உலகம்

    உலகின் உயரமான கிளிமஞ்சாரோ சிகரத்தை எட்டி சாதனை புரிந்த 5 வயது பஞ்சாப் சிறுவன் உலக செய்திகள்
    இந்த இத்தாலிய நகரத்தில் கிரிக்கெட் தடைசெய்யப்பட்டுள்ளது இத்தாலி
    அன்னபூர்ணா இன்டராக்டிவ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கேமிங் ஊழியர்களும் கூண்டோடு ராஜினாமா அமெரிக்கா
    ஒன்பது நாட்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து கேட்ட மர்ம சத்தம்; பின்னணியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் உலக செய்திகள்

    உலக செய்திகள்

    ஜஸ்ட் ஒரு மைல்தான் வெள்ளைமாளிகை; அருகில் இருந்தும் மகள் கமலா ஹாரிஸை ஒருமுறை கூட பார்க்காத தந்தை கமலா ஹாரிஸ்
    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேரணியில் மீண்டும் பாதுகாப்புக் குறைபாடு டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுமா? பொருளாதார நிபுணர் பூஜா ஸ்ரீராம் விளக்கம் அமெரிக்கா
    குரங்கம்மை நோய்க்கான முதல் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் குரங்கம்மை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025