NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும்  மலேசியா  
    அடுத்த செய்திக் கட்டுரை
    போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும்  மலேசியா  
    போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு விதிக்கப்படும் கட்டாய மரண தண்டனையின் விதிகள் தளர்த்தப்பட்டன.

    போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும்  மலேசியா  

    எழுதியவர் Sindhuja SM
    May 15, 2023
    04:56 pm

    செய்தி முன்னோட்டம்

    சிறிதளவு போதைப் பொருள் வைத்திருப்பதையும் பயன்படுத்துவதையும் குற்றமற்றதாக மாற்றுவதற்கான சட்டத்தை மலேசியா அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அரசாங்கத்தால் தொடரப்பட்ட குற்றவியல் நீதி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும்.

    இந்த நீதி சீர்திருத்தங்களுக்கு கீழ், கட்டாய மரண தண்டனை மற்றும் இறக்கும் வரையிலான ஆயுள் தண்டனை ஆகியவை இந்த ஆண்டு நீக்கப்பட்டது.

    மேலும், தற்கொலை முயற்சிகளை குற்றமற்றதாக்க முயற்சித்து வருகிறோம் என்று மலேசிய அரசாங்கம் தெரிவித்திருந்தது.

    DETAILS

    போதை பொருள் வைத்திருப்பவர் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்படுவார்

    பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளை போலவே, மலேசியாவிலும் போதைப்பொருள் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த மாதம், மலேசிய அரசாங்கம் செய்த சீத்திருத்தங்களின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு விதிக்கப்படும் கட்டாய மரண தண்டனையின் விதிகள் தளர்த்தப்பட்டன.

    எனவே மலேசியாவில், போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கலாமா வேண்டாமா என்பதை நீதிபதிகளே இனி தீர்மானிக்கலாம்.

    தற்போது முன்மொழியப்படுள்ள சட்டத்தின் படி, சிறிதளவு போதைப் பொருள் வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்கள் மீது வழக்குத் தொடரப்படாது. மாறாக, கைது செய்யப்பட்டவர் சிகிச்சைக்காக போதைப்பொருள் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்படுவார் என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்
    மலேசியா

    சமீபத்திய

    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா
    துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனையை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி துருக்கி

    உலகம்

    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை  இந்தியா
    மாட்ரிட் ஓபன் 2023 தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகிய பிரபல வீராங்கனை விளையாட்டு
    சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர்  இந்தியா
    வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதோடு அவர்கள் ஆட்சி தகர்க்கப்படும்: ஜோ பைடன்  வட கொரியா

    உலக செய்திகள்

    அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!  சென்னை
    2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு  அமெரிக்கா
    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு  சூடான்
    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்   சிங்கப்பூர்

    மலேசியா

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025