NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார்
    காலமான லக்பீர் சிங் ரோட்.

    பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார்

    எழுதியவர் Srinath r
    Dec 05, 2023
    09:56 am

    செய்தி முன்னோட்டம்

    தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவரும், இந்தியாவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவருமான லக்பீர் சிங் ரோட், பாகிஸ்தானில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 72.

    தடை செய்யப்பட்ட காலிஸ்தான் விடுதலை படை மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பின் தலைவரான லக்பீர் சிங்,

    இந்தியாவால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தார்.

    லக்பீர் சிங், 1984ல் பொற்கோயிலுக்குள் கொல்லப்பட்ட ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    லக்பீர் சிங் ரோட்டின் சகோதரரும் முன்னாள் அகல் தக்த் ஜதேதாருமான ஜஸ்பீர் சிங் ரோட், லக்பீர் சிங் காலமானதை உறுதி செய்தார். மேலும், லக்பீர் சிங்கின் இறுதிச் சடங்குகள் நேற்று முடிந்ததாகவும் தெரிவித்தார்.

    2nd card

    தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு

    சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பின் தலைவரான லக்பீர் சிங், அந்த அமைப்பை 1984 ஆம் ஆண்டு நிறுவினார்.

    இந்த அமைப்பு கனடா மற்றும் இங்கிலாந்தில் செயல்பாட்டில் உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை, சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பை செயல்பாட்டில் உள்ள தீவிரவாத அமைப்பு எனக் கூறுகிறது.

    இந்த அமைப்பிற்கு லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 2002 ஆம் ஆண்டு, பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டத்தின்(பொடா) கீழ் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டது.

    பஞ்சாபின் மோகா மாவட்டத்தின் பகபுரானா தாலுகாவில் உள்ள ஸ்மல்சார் அருகே உள்ள கோதே குருபுரா கிராமத்தில், லக்பீர் சிங்கிற்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்த, மொகாலி தேசிய புலனாய்வு துறை சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    தீவிரவாதிகள்
    பாகிஸ்தான்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    கனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும்: மிரட்டல் விடுக்கும் SFJ  கனடா
    காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன? இந்தியா
    கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை கனடா
    சுகா துனேகே கொலை: கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்பு  கொலை

    தீவிரவாதிகள்

    ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத சதி வழக்கு: 12 இடங்களில் NIA சோதனை இந்தியா
    பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது இந்தியா
    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி  இந்தியா
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  இந்தியா

    பாகிஸ்தான்

    41 ஆண்டுக்கு முந்தைய அவமானத்திற்கு பாகிஸ்தானை பழிதீர்த்தது இந்திய ஹாக்கி அணி இந்திய ஹாக்கி அணி
    2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முக்கியமான பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார் உலகம்
    அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்? பயங்கரவாதம்
    இம்ரான் கான் சிறைக்குள் விஷம் வைத்து கொல்லப்படலாம் - வழக்கறிஞர் மனு  சிறை

    இந்தியா

    இந்திய கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை குறைத்த மத்திய அரசு மத்திய அரசு
    இந்தியா vs ஆஸ்திரேலியா: மின்சார வசதியில்லாத  ராய்பூர் கிரிக்கெட் மைதானம், வெளியான அதிர்ச்சித் தகவல்கள் டி20 கிரிக்கெட்
    காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி செய்ய 200 நாடுகள் ஒப்புதல் துபாய்
    திரும்ப பெறாத 2,000 ரூபாய் நோட்டுக்கள் குறித்த தகவலை வெளியிட்ட ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025