NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உளவு பார்த்த விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே குற்றத்தை ஒப்புக்கொண்டார்; விரைவில் விடுதலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    உளவு பார்த்த விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே குற்றத்தை ஒப்புக்கொண்டார்; விரைவில் விடுதலை
    மரியானா தீவு நீதிமன்றத்தின் முன் ஆஜர் படுத்தப்பட்ட அசாஞ்சே pc: AP

    உளவு பார்த்த விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே குற்றத்தை ஒப்புக்கொண்டார்; விரைவில் விடுதலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 26, 2024
    09:00 am

    செய்தி முன்னோட்டம்

    விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே புதன்கிழமையன்று அமெரிக்க தேசிய பாதுகாப்புத் தகவலைப் பெற்றதற்கும், அதனை வெளியிடுவதற்கும் சதி செய்ததாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    இதன் மூலம் அவரது பல வருட சட்டப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அவர் விரைவில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அசாஞ்சே, அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதிக்கு பயணம் செய்ய மறுத்ததாலும், அவரது தாயகமான ஆஸ்திரேலியாவுக்கு அருகாமையில் இருப்பதாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கவின் ஒரு பகுதியான வடக்கு மரியானா தீவுகளில், அமெரிக்க மாவட்ட நீதிமன்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக மனு தாக்கல் செய்தார்.

    ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2006ல் அவர் நிறுவிய ரகசிய இணையத்தளமான விக்கிலீக்ஸுக்கு அளிக்கப்பட்ட தகவல்களை அசாஞ்சே அழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தண்டனை

    விரைவில் அசாஞ்சே வெளியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது

    விக்கிலீக்ஸ் மூலம் நூறாயிரக்கணக்கான இரகசிய ஆவணங்களை 2010இல் வெளியிட்டதற்காக அமெரிக்காவால் நீண்டகாலமாக தேடப்பட்டு வரும் அசாஞ்சேக்கான நீண்ட விசாரணை மற்றும் சாத்தியமான சிறைத்தண்டனையை இந்த மனு ஒப்பந்தம் தவிர்க்கிறது.

    வழக்கின் விசாரணையின் இறுதியில், ஐந்து ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் அவர் பிரிட்டன் சிறையில் இருந்த காலமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

    அவர் ஐந்து ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்பு பிரிட்டிஷ் சிறையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.

    விசாரணைக்குப் பிறகு, அசாஞ்சே ஆஸ்திரேலியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

    எனினும் விக்கிலீக்ஸ் சமூக ஊடக தளமான X இல் அவர் திரும்புவதை உறுதிப்படுத்தி, மனு ஒப்பந்தத்தை "தேவையற்றது" என்று குறிப்பிட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜூலியன் அசாஞ்சே
    விடுதலை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஜூலியன் அசாஞ்சே

    விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பாங்காக் வந்தடைந்தார்; ஏன்? விக்கிலீக்ஸ்
    யார் இந்த ஜூலியன் அசாஞ்சே? அவர் என்ன ரகசியங்களை வெளியிட்டார்? விக்கிலீக்ஸ்

    விடுதலை

    விடுதலை 1 & 2 படத்திற்காக ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் வெற்றிமாறனுக்கு கிடைத்த மரியாதை  வெற்றிமாறன்
    தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் மு.க.அழகிரி விடுதலை: நீதிமன்றம் உத்தரவு மு.க.அழகிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025