NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை
    சுட்டுக் கொல்லப்பட்ட மௌலானா ரஹீம் உல்லா தாரிக்(இடது), ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மௌலானா மசூத் அசாரி(இடது).

    பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை

    எழுதியவர் Srinath r
    Nov 14, 2023
    10:49 am

    செய்தி முன்னோட்டம்

    ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதியும், அந்த அமைப்பின் தலைவரான மௌலானா மசூத் அசாரியின் நெருங்கிய கூட்டாளியுமான மௌலானா ரஹீம் உல்லா தாரிக், பாகிஸ்தானின் கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    கராச்சியின் ஆரங்கி நகரத்தில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்களால் தாரிக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஆரங்கி நகரத்தை நன்கு கொலையாளிகள், அருகில் இருந்து பலமுறை சுட்டதில் தாரிக் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

    இது "குறி வைக்கப்பட்ட கொலை" என்றும், "பயங்கரவாதச் செயல்" என்றும் கராச்சி காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தாரிக் கொலையில் உள்ளூர் தீவிரவாதிகளின் பங்கு மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    2nd card

    பாகிஸ்தானில் தொடர்ந்து கொள்ளப்படும் தீவிரவாதிகள்

    இந்தியாவிற்கு எதிராக சதி வேலைகள் செய்து வந்த தீவிரவாதிகள், பாகிஸ்தானில் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.

    தாரிக்கின் கொலை, இந்த மாதம் முக்கிய தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களுக்கு எதிராக நடந்த மூன்றாவது கொலையாகும். மேலும் இந்த ஆண்டில் நடைபெறும் எட்டாவது கொலையாகும்.

    கடந்த வாரம் கொல்லப்பட்ட காஜி என்கிற அக்ரம் கான், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத குழுவின் ஆட்சேர்ப்பு பிரிவைச் சார்ந்தவர்.

    2018-2020 வரையிலான காலகட்டத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக, இந்தியாவிற்கு நுழைந்த பல தீவிரவாதிகளை, காஜி மூளைச்சலவை செய்தது குறிப்பிடத்தக்கது.

    செப்டம்பர் மாதத்தில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மற்றொரு தீவிரவாதி ரியாஸ் அகமது பாகிஸ்தானின் ராவல்கோட் பகுதியில் கொல்லப்பட்டார்.

    அவர், லஷ்கர்-இ-தொய்பாவின் பாகிஸ்தான் செயல்பாடுகள் மற்றும் ஆட்சேர்ப்பு பணிகளை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    இந்த வருடம் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள்

    மே மாதத்தின் தொடக்கத்தில், காலிஸ்தான் கமாண்டோ படையைச் சேர்ந்த பரம்ஜித் சிங் பஞ்வார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    லஷ்கர்-இ-தொய்பாவின் மௌலானா ஜியாவுர் ரஹ்மான் மற்றும் முஃப்தி கைசர் பாரூக், செப்டம்பர் மாதம் கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    2016-ம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய, ஃபிதாயீன் படையின் தலைமை தளபதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி, ஷாகித் லத்தீப் அக்டோபர் மாதத்தில் கொல்லப்பட்டார்.

    அக்டோபர் மாதத்தில், லஷ்கர்-இ-தொய்பாவின் கவஜா சாகித் கடத்தப்பட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், லயன் ஆப் கண்ட்ரோல் (LoC) அருகில், தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீவிரவாதிகள்
    தீவிரவாதம்
    பயங்கரவாதம்
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்
    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா

    தீவிரவாதிகள்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் ஜம்மு காஷ்மீர்
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா

    தீவிரவாதம்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் ஜம்மு காஷ்மீர்
    காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன? காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் தீவிரவாதிகள்

    பாகிஸ்தான்

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் இந்தியா டேவிஸ் கோப்பை
    'காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்': ஐநா சபையில் வைத்து பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா இந்தியா
    1 கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள்: உலக வங்கி  உலக வங்கி
    3 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை சுட்டு கொன்ற 14 வயது மகள்: பாகிஸ்தானில் கொடூரம்  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025