NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை
    காசாவில் தாக்குதலை தீவிர படுத்திய இஸ்ரேல் படைகள். படம்- ராய்ட்டர்ஸ்

    காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை

    எழுதியவர் Srinath r
    Nov 03, 2023
    09:43 am

    செய்தி முன்னோட்டம்

    ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மையமான காசா நகரை, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளதாக, இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

    மேலும் தற்போதைக்கு, 'போர் நிறுத்தம்' என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அதே சமயம், ஹமாஸின் இராணுவப் பிரிவு, எஸெடின் அல்-கஸ்ஸாம் படையணி, இஸ்ரேல் வீரர்கள் கருப்பு பைகளில் திரும்பி செல்வர் என எச்சரித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் பாலஸ்தீனப் போர், 27வது நாளாக நீடித்து வரும் நிலையில், காசாவிற்குள் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

    இஸ்ரேலின் தற்போதைய நடவடிக்கை, அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் நேற்றைய போர் நிறுத்த வலியுறுத்தலுக்கு எதிராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    இஸ்ரேலில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்

    போர் தொடங்கியதற்கு பின், இரண்டாவது முறையாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் சென்றுள்ளார்.

    அங்கு அவர், "காசாவில் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக" தெரிவித்தார்.

    இஸ்ரேல் தொடர்ந்து காசாவின் பல பகுதிகளில் நடத்தி வரும் தாக்குதலில், இதுவரை 9,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதில் 50% நபர்கள் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெளிநாட்டு குடிமக்கள், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், போரில் மோசமாக காயம் அடைந்தவர்கள் ஆகியோர் காசாவில் இருந்து வெளியேற ரஃபா எல்லையை எகிப்து இரண்டு நாட்களுக்கு முன்னர் திறந்தது.

    நேற்று ரஃபா எல்லை வழியாக, 72 குழந்தைகள் உட்பட 344 வெளிநாட்டினர் வெளியேறினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹமாஸ்
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    குடியரசு தலைவர்

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    ஹமாஸ்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: யார் பக்கம் யார்? அவர்களின் ராணுவ வளங்கள் என்ன? இஸ்ரேல்
    சுரங்கப்பாதைகளை வைத்து இஸ்ரேலுக்கு டிமிக்கி கொடுக்கும் ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து இஸ்ரேல்

    இஸ்ரேல்

    அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பயண எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனைகளுக்கும் ஈரானுக்கும் என்ன தொடர்பு: ஒரு வரலாற்று பார்வை  ஈரான்
    மேற்கு கரையில் மசூதி மேல் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ஹமாஸ்
    இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா  இஸ்ரேல்
    மத்திய கிழக்கிற்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா இஸ்ரேல்
    இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர் ஹமாஸ்
    காசாவில் இன்குபேட்டரில் உள்ள 120 குழந்தைகள் ஆபத்தில் உள்ளன- ஐநா ஐநா சபை

    குடியரசு தலைவர்

    சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி மு.க ஸ்டாலின்
    அரசுமுறை பயணத்தினை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு  தமிழ்நாடு
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி பிரதமர்
    ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை ஜி20 மாநாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025