NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹமாஸ் "கலைக்கப்படும் தருவாயில்" இருப்பதாகக் இஸ்ரேல் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹமாஸ்

    ஹமாஸ் "கலைக்கப்படும் தருவாயில்" இருப்பதாகக் இஸ்ரேல் அறிவிப்பு

    எழுதியவர் Srinath r
    Dec 12, 2023
    12:44 pm

    செய்தி முன்னோட்டம்

    காசா பகுதியில் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல், பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் கலைக்கப்படும் தருவாயில் உள்ளதாக அறிவித்துள்ளது.

    இஸ்ரேலில் தாக்குதல் காசாவில் உள்ள பாலஸ்தீன் மக்களை, பசி மற்றும் கடுமையான சுகாதார சீர்கேட்டுக்குள் தள்ளி வருவதால், பல தலைவர்கள் அப்பாவி மக்களை காப்பாற்ற அந்நாட்டை வலியுறுத்தி வருகின்றனர்.

    இன்று போர் கடுமையாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய காசாவில் மோதல்கள் நடந்ததாக ஹமாஸ் கூறியதுடன், பிரதேசத்தின் தெற்கில் இஸ்ரேலிய தாக்குதல்கள் நடந்ததாக கண்ணால் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    பல ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்துள்ள, கான் யூனிஸ் மற்றும் எகிப்தையொட்டியுள்ள ரஃபா பகுதிகளில், தீவிர போர் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    18,000 கடந்த பாலஸ்தீனர்களின் உயிரிழப்பு

    "ஹமாஸ் கலைக்கப்படும் தருவாயில் உள்ளது. ஹமாசின் கடைசி கோட்டைகளையும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கைப்பற்றி வருகிறது" என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலான்ட் நேற்று தெரிவித்தார்.

    கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நடந்து வரும் போரில், தற்போது வரை 18,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொள்ளப்பட்டுள்ளதாக, ஹமாசால் நிர்வகிக்கப்படும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என சுகாதார அமைச்சகம் கூறிவரும் நிலையில், உயிரிழந்தவர்களில் 6,000க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் போராளிகள் என இஸ்ரேல் கூறுகிறது.

    அக்டோபர் 7 தாக்குதலில், 1,200 இஸ்ரேலிகள் கொல்லப்பட்ட நிலையில், 240 நபர்கள் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

    3rd card

    1.9 மில்லியன் பாலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

    காசாவின் 2.4 மில்லியன் மக்களில், 1.9 மில்லியன் பேர் போரினால் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களில் பாதி பேர் குழந்தைகள் என ஐநா கூறுகிறது.

    போரின் தொடக்க நாட்களில் காசாவின் வடக்கு பகுதியில் இருந்த மக்களை தெற்கு நோக்கி வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டிருந்தது.

    தற்போது, தெற்கிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பான இடங்கள் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    காசாவில் உள்ள பொதுமக்கள் பேரழிவுகரமான சூழ்நிலையை எதிர்கொள்வதை, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதர் ஜோசப் பொரெல் திங்களன்று, இரண்டாம் உலகப் போரின்போது ஜேர்மனியின் அழிவுடன் இதை ஒப்பிடுகிறார்.

    4th card

    போர் நிறுத்தம் மீதான தீர்மானத்தின் மீது ஐநா சபையில் இன்று வாக்கெடுப்பு

    ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்ற தவறிய, காசாவில் போர் நிறுத்தம் கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு, ஐநா சபையில் இன்று நடைபெற உள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாதுகாப்புக்கு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தை, அமெரிக்கா தனது வீட்டோ சக்தி கொண்டு தடுத்தது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேலுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, ஒரு டசனுக்கும் அதிகமான பாதுகாப்புச் சபை தூதர்கள் ரஃபா எல்லைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, அரபு நாடுகள் ஐநா பொதுச் சபையின் புதிய சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுத்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    காசா
    எகிப்து

    சமீபத்திய

    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை
    இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் வங்கிக் கணக்கு

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு காசா
    செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?  கடத்தல்
    இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல்
    இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது இஸ்ரேல்

    இஸ்ரேல்

    ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்: எலான் மஸ்க் எலான் மஸ்க்

    காசா

    பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம் ஹமாஸ்
    அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு ஹமாஸ்
    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு ஹமாஸ்
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் போர்

    எகிப்து

    இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி இஸ்ரேல்
    பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் இஸ்ரேல்
    இஸ்ரேல் போரினால் காசாவில் சிக்கி இருந்த வெளிநாட்டவர்கள் எகிப்து வழியே வெளியேற்றம் இஸ்ரேல்
    எகிப்தில் உள்ள ஸ்பிங்ஸ் சிலையின் உருவாக்கத்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025