NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களை பயன்படுத்துவோம்: ஈரான் மிரட்டல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களை பயன்படுத்துவோம்: ஈரான் மிரட்டல்
    "இஸ்ரேலின் எந்தவொரு தாக்குதலுக்கும் நொடிகளில் பதிலளிப்போம்" என்று ஈரான் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களை பயன்படுத்துவோம்: ஈரான் மிரட்டல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 16, 2024
    08:58 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று இஸ்ரேலின் இராணுவத் தலைவர், ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்றும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.

    இதற்கிடையில், "இஸ்ரேலின் எந்தவொரு தாக்குதலுக்கும் நொடிகளில் பதிலளிப்போம்" என்று ஈரான் தெரிவித்துள்ளது.

    அதோடு, தேவைப்பட்டால் இதற்கு முன் பயன்படுத்தாத ஆயுதங்களை கூட பயன்படுத்தக்கூடும் என மிரட்டல் விடுத்துள்ளது.

    ஏப்ரல் 13 அன்று, ஈரான் தனது பரம எதிரியான இஸ்ரேல் மீது முதல் முறையாக நேரடி தாக்குதலை நடத்தியது. 300 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஈரான் ஏவியது.

    ஏப்ரல் 1 ம் தேதி அன்று சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள தெஹ்ரானின் தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

    மத்திய கிழக்கு நெருக்கடி

    அமைச்சரவையை கூடிய இஸ்ரேல் பிரதமர்

    இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் போக்கை தீர்மானிக்க கடந்த 24 மணி நேரத்திற்குள் இரண்டாவது முறையாக தனது போர் அமைச்சரவையை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

    எனினும் இஸ்ரேல் அரசு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

    இதற்கிடையே அமெரிக்க உயர் அதிகாரி ஸ்டீவ் ஸ்காலிஸுடனான உரையாடலில் நெதன்யாகு, "இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான அனைத்தையும் செய்யும்" என்று கூறியதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலின் சேனல் 12 இன் படி, போர் அமைச்சரவை அதன் கூட்டத்தில் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு ஈரானை காயப்படுத்தும் நோக்கத்துடன், ஆனால் ஒரு முழுமையான போரை ஏற்படுத்தாமல் இருக்கும் பல வழிகளை விவாதித்ததாக கூறப்படுகிறது.

    உலக நாடுகள்

    உலக நாடுகள் பலவும் போர் வேண்டாம் என அறிவுறுத்தல்

    மோதலை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்று இஸ்ரேல் மீது உலக நாடுகள் கடும் அழுத்தத்தை தந்து வருகிறது.

    அமெரிக்கா உட்பட பல நாடுகள், இஸ்ரேல் நிதானத்தைக் காட்டுமாறு வலியுறுத்தியுள்ளன. "நாங்கள் ஈரானுடன் ஒரு போரைப் பார்க்க விரும்பவில்லை. பிராந்திய மோதலை நாங்கள் பார்க்க விரும்பவில்லை," என்று வெள்ளை மாளிகை கூறியது.

    ஈரான் தனது இறையாண்மை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஈரானால் சூழ்நிலையைச் சிறப்பாகக் கையாள முடியும் மற்றும் பிராந்தியத்தில் மேலும் கொந்தளிப்பைத் தவிர்க்க முடியும் என்று சீனா நம்புவதாகக் கூறியது.

    அதே நேரத்தில் ரஷ்யா, தனது நட்பு நாடான ஈரானை பகிரங்கமாக விமர்சிப்பதைத் தவிர்த்தது. ஆனால் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் அதிகரிப்பது யாருக்கும் நல்லது அல்ல என்று கூறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    இஸ்ரேல்
    போர்
    சீனா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஈரான்

    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் அமெரிக்கா
    இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல்
    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் ஏமன்

    இஸ்ரேல்

    வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா பல்கலைக்கழகத்தின் மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல்: வைரலாகும் வீடியோ  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவ பரிந்துரைத்தார் அமெரிக்க அதிபர் பைடன்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இனப்படுகொலைக்கான தூண்டுதலைத் தடுக்கவும் தண்டிக்கவும் இஸ்ரேலுக்கு உலக நீதிமன்றம் உத்தரவு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    போர்

    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்

    சீனா

    பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பூட்டான் கிராமங்களில், ஊடுருவி கட்டுமானங்களை மேற்கொள்ளும் சீனா பூட்டான்
    2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை உலகம்
    சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு இலங்கை
    பெய்ஜிங்கில் மெட்ரோ ரயில்கள் மோதல்- 515 பேர் காயம் பெய்ஜிங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025