
எதுவா இருந்தாலும் போர் முடிந்த பிறகுதான்; அமெரிக்க பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்
செய்தி முன்னோட்டம்
நடந்து வரும் மோதலில் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதாக குற்றம் சாட்டி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ஈரான் உறுதியாக நிராகரித்துள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி கூறினார்.
"அமெரிக்கர்கள் பேச்சுவார்த்தை வேண்டும் கேட்டுள்ளனர், எங்கள் பதில் இல்லை என்பதுதான்." என்று அராச்சி ஈரான் இன்டர்நேஷனல் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பேச்சு இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவின் தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளதாக அவர் கூறினார்.
தீவிரமான உரையாடலைக் கோரி அமெரிக்கா மீண்டும் மீண்டும் வெவ்வேறு முறையில் தகவல் அனுப்புவதாகவும் ஈரான் குற்றம் சாட்டியது.
பேச்சுவார்த்தை
போருக்குப் பிறகே பேச்சுவார்த்தை
போர் முடிந்தவுடன் மட்டுமே ராஜதந்திரம் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்று ஈரானிய அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினர்.
ஜெனீவாவில் ஐரோப்பிய தலைவர்களை சந்திக்க திட்டமிடப்பட்ட அராச்சி, ஈரான் தற்காப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அதன் ராணுவ பதிலடியை நிறுத்தாது என்றும் கூறினார்.
ஜூன் 12 அன்று இஸ்ரேலிய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலிய தாக்குதலில் சேரலாமா வேண்டாமா என்பது குறித்த முடிவை தாமதப்படுத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, டிரம்ப் இரண்டு வாரங்களுக்குள் இறுதி முடிவை எடுப்பார், ஆனால் பேச்சுவார்த்தைகள் மூலம் அணுசக்தி பிரச்சினையைத் தீர்க்க கணிசமான வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறார்.