NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 21 பேர் பலி; இந்தியர்களுக்கு எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 21 பேர் பலி; இந்தியர்களுக்கு எச்சரிக்கை
    வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை

    வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 21 பேர் பலி; இந்தியர்களுக்கு எச்சரிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 04, 2024
    06:14 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்கதேசத்தில் மீண்டும் மோதல் வெடித்ததை அடுத்து, வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இன்று நடந்த கடுமையான மோதல்களில் 21 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    இது குறித்து வங்கதேசத்தின் சில்ஹெட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அங்கு வசிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட அனைத்து இந்திய பிரஜைகளும் தூதரத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், எச்சரிக்கையாக இருக்குமாறும், அவசரநிலைகள் ஏற்பட்டால் +88-01313076402 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, அரசு வேலை இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்து வரும் போராட்டத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி இன்று மீண்டும் போராட்டம் தொடங்கியது.

    போராட்டத்தின் பின்னணி

    சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டம்

    சில நாட்களுக்கு முன்பு, 1971இல் நடந்த வங்கதேச சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் உறவினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறையாக 200 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், அரசை ராஜினாமா செய்யக் கோரி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நடந்த போராட்டத்தின்போது ஆளும் கட்சியினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது.

    வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் என்ற பெயரில் நாசவேலையில் ஈடுபடுபவர்கள் மாணவர்கள் அல்ல பயங்கரவாதிகள் என்றும், அவர்களை உறுதியான கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் பிரதமர் ஹசீனா பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    போராட்டம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பங்களாதேஷ்

    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம்  உலகம்
    பங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும் சுற்றுலா
    ஆசிய கோப்பை BANvsPAK : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு ஆசிய கோப்பை
    BANvsPAK: பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 200 ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்  ஆசிய கோப்பை

    போராட்டம்

    சிறு குறு நிறுவனங்களின் ஒரு கோரிக்கையினை ஏற்ற தமிழக அரசு  தமிழ்நாடு
    மதுரை அரசு மருத்துவமனை - கர்ப்பிணிகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரசு மருத்துவமனை
    சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது  கைது
    ஈரானை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு ஈரான்

    இந்தியா

    விவசாயியை துப்பாக்கியை வைத்து மிரட்டிய ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கரின் பெற்றோர் மீது வழக்கு  மகாராஷ்டிரா
    ஜலந்தர் மேற்கு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி: இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் முன்னிலை  பஞ்சாப்
    ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க விதிகளில் திருத்தம் செய்தது மத்திய அரசு  ஜம்மு காஷ்மீர்
    ஒலிம்பிக்: 2012 லண்டன் விளையாட்டுப் போட்டியில் இந்தியா படைத்த சாதனைகள்  ஒலிம்பிக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025