NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு

    சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு

    எழுதியவர் Srinath r
    Dec 15, 2023
    11:46 am

    செய்தி முன்னோட்டம்

    சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6, இலங்கைக் கடற்கரையில் தனது ஆய்வை முடித்து டிசம்பர் 2 ஆம் தேதி சிங்கப்பூரை அடைந்தது.

    இதனைத் தொடர்ந்து, தென் இந்தியப் பெருங்கடலில் ஜனவரி 5 முதல் மே 2024 வரை, பெய்ஜிங் மற்றொரு ஆய்வுக் கப்பலைத் துறைமுகங்களில் நிறுத்தி ஆழமான கடல் ஆய்வுகளை நடத்த அனுமதிக்க கொழும்பு மற்றும் மாலத்தீவுகளிடம் அனுமதி கேட்டுள்ளது.

    இலங்கை மற்றும் மாலத்தீவுகள், ஏற்கனவே சீன கப்பலுக்கு அனுமதி வழங்கியதற்கு, இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது தென் சீனக் கடலில் உள்ள ஜியாமென் கடற்கரையில் உள்ள, சியாங் யாங் ஹாங் ஆய்வு கப்பல், இலங்கை மற்றும் மாலத்தீவுகளிடம் அனுமதி கிடைத்தபின், அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும்.

    2nd card

    சென்னைக்கு அருகில் தென்பட்ட சீனா ஆய்வு கப்பல்

    ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில், இந்தியாவின் கடும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், ஷி யான் 6 ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த கப்பல், இலங்கைக்கு செல்வதற்கு முன், இந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி, சென்னையிலிருந்து 500 கடல் மைல்கள் தொலைவில் தென்பட்டது. பின்னர் அங்கு சென்று பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டது.

    தற்போது ஆய்வு செய்ய இருக்கும் சியாங் யாங் ஹாங், 4,813 டன் எடை கொண்ட அதிநவீன ஆய்வு மற்றும் கண்காணிப்பு உபகரணங்களை கொண்ட கப்பலாகும்.

    3rd card

    சீனக் ஆய்வு கப்பலால் ஏன் இந்தியா கவலைப்படுகிறது?

    கடலாய்வு என்ற பெயரில் சீன பாலிஸ்டிக் ஏவுகணை டிராக்கர்கள் மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பு கப்பல்களை, மாலத்தீவுகள் மற்றும் இலங்கை அனுபதிப்பது, சீனா இந்தியாவை உளவு பார்ப்பதற்காக என இந்தியா கருதுகிறது.

    மேலும் இது குறித்து, இந்த ஆண்டு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது, பிரதமர் மோடி தனது கவலைகளை தெரிவித்தார்.

    கடல் ஆய்வு என்ற பெயரில், பெய்ஜிங் உண்மையில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு தெற்கே உள்ள தொண்ணூறு டிகிரி மேடு முதல் ஆழமான தென் இந்தியப் பெருங்கடல் வரை,

    இந்தியப் பெருங்கடல் படுக்கையை நீர்மூழ்கி கப்பல்களின் தாக்குதலுக்கு பயன்படும் வகையில் வரைபடம் ஆக்குவதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    இலங்கை
    சிங்கப்பூர்
    பெய்ஜிங்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சீனா

    இந்திய படைகள் மாலத்தீவுகளை விட்டு வெளியேற வேண்டும்: அதிபர் முகமது முய்ஸோ அறிவிப்பு  இந்தியா
    Sports RoundUp- உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரம் மற்றும் பல முக்கிய செய்திகள் சென்னை
    உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனங்கள்  உலகம்
    இந்தியர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்கு செல்லலாம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய நடவடிக்கை தாய்லாந்து

    இலங்கை

    சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி  இந்தியா
    ஆசிய கோப்பை, SLvsAFG: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யும் இலங்கை ஆசிய கோப்பை
    SLvsAFG: போராடிய இலங்கை, ஆஃப்கானுக்கு 292 ரன்கள் இலக்கு! ஆசிய கோப்பை
    SLvsAFG: மயிரிழையில் சூப்பர் 4 வாய்ப்பையும், இலங்கையுடனான வெற்றியையும் தவற விட்டது ஆஃப்கான் ஆசிய கோப்பை

    சிங்கப்பூர்

    இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள் தொழில்நுட்பம்
    இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்  இந்தியா
    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்   உலக செய்திகள்
    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    பெய்ஜிங்

    சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி  சீனா
    சீனாவில் பரவி வரும் புதுவகை நிமோனியா காய்ச்சல்- விளக்கம் கேட்கும் உலக சுகாதார அமைப்பு சீனா
    சீனாவில் பரவும் புதிய வகை நிமோனியா பற்றி இதுவரை அறிந்தவை சீனா
    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை? சிங்கப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025