NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
    இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது

    இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 19, 2025
    07:16 am

    செய்தி முன்னோட்டம்

    பஞ்சாபில் பல தாக்குதல்களுக்காக இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்ப்ரீத் சிங், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) மற்றும் அமலாக்க மற்றும் அகற்றல் நடவடிக்கைகள் (ERO) ஆகியவற்றால் சாக்ரமெண்டோவில் கைது செய்யப்பட்டார்.

    இந்த கைது குறித்து FBI சாக்ரமெண்டோவால் சமூக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டது, அதில் ஹர்ப்ரீத் சிங் இரண்டு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றும் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததாகவும் கூறப்பட்டது.

    ஹேப்பி பார்சியா மற்றும் ஜோரா என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங், பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

    பிரிட்டனில் சிறிது காலம் தங்கிய பிறகு, அவர் 2021 இல் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க, அவர் பர்னர் போன்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

    என்ஐஏ

    ஹர்ப்ரீத் சிங் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு

    அக்டோபர் 1, 2024 அன்று பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில், ஹர்ப்ரீத் சிங்கை தலைமறைவு குற்றவாளியாக இந்தியாவில் உள்ள தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) அறிவித்தது.

    கடந்த ஜனவரி மாதம், சண்டிகரின் செக்டார் 10/டி இல் நடந்த கையெறி குண்டுத் தாக்குதல் தொடர்பாக அவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ₹5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்தது.

    மார்ச் 23 அன்று, தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) இன் நான்கு செயல்பாட்டாளர்கள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது, அதில் ஹர்ப்ரீத் சிங் ஒரு குற்றவாளியாக பட்டியலிடப்பட்டார்.

    மும்பை 26/11 தாக்குதலில் தஹாவூர் ராணா நாடு கடத்தப்பட்ட பிறகு, இந்த கைது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    என்ஐஏ
    உலகம்

    சமீபத்திய

    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்? சுபன்ஷு சுக்லா
    கடலூர் சாயப் பட்டறையில் ரசாயன பாய்லர் வெடித்து விபத்து; 19 பேருக்கு காயம் கடலூர்
    நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கௌரவிப்பு நீரஜ் சோப்ரா
    சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிற்கு பாகிஸ்தான் கடிதம்  சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    அமெரிக்கா

    26/11 சதிகாரர் தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டாதாக தகவல் இந்தியா
    போராட்டங்கள், பார்க்கிங் அபராதம் உள்ளிட்டவைகளில் சிக்கினால் உங்கள் அமெரிக்க விசா ரத்து செய்யப்படலாம் விசா
    104% க்கு பதிலடியாக 84%: அமெரிக்கப் பொருட்களுக்கு பதிலடி வரிகளை விதித்துள்ள சீனா  சீனா
    பரஸ்பர வரிக்கு 90 நாள் இடைநிறுத்தம்; சீனாவிற்கு வரியை 125% ஆக உயர்த்திய டிரம்ப் சீனா

    இந்தியா

    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது மத்திய அரசு பெட்ரோல்
    இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான்  ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    குடும்பஸ்தர்களுக்கு ஷாக்; வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு எரிவாயு சிலிண்டர்
    அமைதிப் பாதைக்குத் திரும்பும் நக்சல்கள்; சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 26 பேர் சரண் சத்தீஸ்கர்

    என்ஐஏ

    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை கோவை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை தமிழ்நாடு
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது  திண்டுக்கல்

    உலகம்

    உலக பாதுகாப்பு குறியீடு 2025 தரவரிசையில் 89வது இடத்தில் அமெரிக்கா; இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? அமெரிக்கா
    தலைநகரில் குவிக்கப்படும் படைகள்; பங்களாதேஷில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமா? பங்களாதேஷ்
    வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்களுக்கு 25% வரி விதிக்க டொனால்ட் டிரம்ப் உத்தரவு அமெரிக்கா
    விளாடிமிர் புடின் விரைவில் உயிரிழப்பார்; உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பரபரப்பு கருத்து உக்ரைன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025