NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு எகிப்து எச்சரித்ததாக அமெரிக்கா தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு எகிப்து எச்சரித்ததாக அமெரிக்கா தகவல்
    கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஹமாஸ் தாக்குதலுக்கு எதிர்வினையாக. காஸா மீது இஸ்ரேல் குண்டு மழைபொழிந்து வருகிறது.

    ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு எகிப்து எச்சரித்ததாக அமெரிக்கா தகவல்

    எழுதியவர் Srinath r
    Oct 12, 2023
    01:12 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹமாஸ் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன், அந்த தாக்குதல் குறித்து எகிப்து அரசு இஸ்ரேலுக்கு எச்சரித்ததாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக்குழுவின் தலைவர் மைக்கேல் மெக்கால் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அந்தத் தகவலை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முற்றிலும் பொய் என மறுத்துவிட்டார்.

    இஸ்ரேலில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஹமாஸ் நடத்திய தாக்குதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த தாக்குதலை தடுக்க தவறியது இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் தோல்வியை காட்டுவதாக கூறப்படுகிறது.

    "இதுபோன்ற நிகழ்வு நடக்கலாம் என எகிப்து 3 நாட்களுக்கு முன்னரே இஸ்ரேலை எச்சரித்திருந்தது எங்களுக்கு தெரியும்" என மைக்கேல் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் பேசியதாக ஏஎஃப்பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    2nd card

    தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு எச்சரிக்கப்பட்டதாக எகிப்து தகவல்

    ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு எச்சரிக்கப்பட்டதாக, எகிப்து உளவுத்துறை அதிகாரி ஏபி செய்தி முகமை இடம் கூறியிருந்தார்.

    "நாங்கள் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறலாம் என இஸ்ரேலை எச்சரித்து இருந்தோம். அது மிக விரைவில் மற்றும் மிகப்பெரியதாக இருக்கும் எனக் கூறியிருந்தோம்".

    "ஆனால் அந்த எச்சரிக்கையை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லை" என பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார்.

    மற்றொரு கெய்ரோ(எகிப்தின் தலைநகரம்) அதிகாரி கூறுகையில், இஸ்ரேலிய அதிகாரிகள் காஸா பகுதியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல், மேற்கு கரையில் அவர்கள் கவனம் செலுத்திவந்ததாக கூறினார்.

    காஸா உடன் தன் எல்லைகளை பகிர்ந்து கொண்டிருக்கும் எகிப்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான பிரச்சனைகளில் மத்தியஸ்திரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இஸ்ரேல்
    பிரதமர்
    தீவிரவாதிகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அமெரிக்கா

    அமெரிக்காவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட போட்டோஸ் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள் கூகுள்
    டெட்ராய்டு ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது உலகின் முதல் பறக்கும் கார் கார்
    'இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் விதிவிலக்கானது': வெளியுறவுத்துறை அமைச்சர்  ரஷ்யா
    வெள்ளத்தில் மூழ்கிய நியூயார்க் நகரம்: மெட்ரோ மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு  நியூயார்க்

    இஸ்ரேல்

    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  உலகம்
    'ஆபரேஷன் இரும்பு வாள்': பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக போரை தொடங்கியது இஸ்ரேல்  உலகம்
    இஸ்ரேல் மீது மிகப்பெரும் தாக்குதல்: வைரலாகும் வீடியோக்கள்  உலகம்
    இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு இந்தியா அறிவுரை  இந்தியா

    பிரதமர்

    'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு  இந்தியா
    மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    மே 21ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    தனது 58 வயதில், 8வது குழந்தைக்கு தந்தையாகும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டன்

    தீவிரவாதிகள்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் ஜம்மு காஷ்மீர்
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025