NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / "நீதிமன்ற அவமதிப்பு": இம்ரான் கான் கைது குறித்து பேசிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    "நீதிமன்ற அவமதிப்பு": இம்ரான் கான் கைது குறித்து பேசிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
    இம்ரான் கானை மாலை 4:30 மணிக்குள்(உள்ளூர் நேரம்) ஆஜர்படுத்தும்படி NAB-க்கு உத்தரவிடபட்டுள்ளது.

    "நீதிமன்ற அவமதிப்பு": இம்ரான் கான் கைது குறித்து பேசிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    May 11, 2023
    06:06 pm

    செய்தி முன்னோட்டம்

    நீதிமன்றப் பதிவாளரின் அனுமதியின்றி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து இம்ரான் கானைக் கைது செய்தது "நீதிமன்ற அவமதிப்பாக" கருதப்படுகிறது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை ஒரு மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்துமாறு ஊழல் தடுப்புக் குழுவுக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று(மே 11) உத்தரவிட்டது.

    அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இம்ரான் கான் தொடுத்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

    பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல், நீதிபதி முகமது அலி மசார் மற்றும் நீதிபதி அதர் மினல்லா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமர்வு இன்று அவரது மனுவை விசாரித்தது.

    DETAILS

    கைது செய்வதற்கு முன் நீதிமன்ற பதிவாளரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்: தலைமை நீதிபதி

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக மே 9ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார்.

    இது குறித்து விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவர் கைது செய்யப்பட்ட விதம் குறித்து கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.

    "90 பேர் நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்தால், நீதிமன்றத்திற்கு என்ன மரியாதை இருக்கிறது? நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஒரு நபரை எப்படி கைது செய்ய முடியும்?" என்று கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் தலைமை நீதிபதி, தேசிய பொறுப்புக்கூறல் பணியகம்(NAB) "நீதிமன்ற அவமதிப்பு" செய்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், இம்ரான் கானை மாலை 4:30 மணிக்குள்(உள்ளூர் நேரம்) ஆஜர்படுத்தும்படி NAB-க்கு உத்தரவிடபட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இம்ரான் கான்
    உச்ச நீதிமன்றம்
    உலகம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம் இந்தியா
    இந்தியாவில் கூட தொழுகையின் போது மக்கள் கொல்லப்பட்டதில்லை: பாக். அமைச்சர் உலகம்
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா தீவிரவாதிகள்
    விக்கிபீடியாவுக்கு தடை: அவதூறான உள்ளடக்கங்களை நீக்க தவறியதாக குற்றசாட்டு உலகம்

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்

    உச்ச நீதிமன்றம்

    ராகுல் காந்தி தகுதி நீக்கத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு ராகுல் காந்தி
    மத்திய அரசால் 'மீடியாஒன்' சேனலின் மீது போடபட்டிருந்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம் இந்தியா
    மத்திய அரசுக்கு எதிராக 14 கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி மத்திய அரசு
    தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு  இந்தியா

    உலகம்

    உலக பென்குயின் தினம்: இந்த அழகான கடற்பறவைகளைப் பற்றிய 5 சுவாரஸ்யமான தகவல்கள் பருவநிலை
    போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான் ஜப்பான்
    பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி பாகிஸ்தான்
    2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025