NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல்
    தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல்

    தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 19, 2023
    11:20 am

    செய்தி முன்னோட்டம்

    நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கடுமையான உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

    தாவூத் இப்ராஹிமை, விஷம் வைத்து கொல்லப்பட சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதனாலேயே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகின.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாவுத் இப்ராஹிம், பலத்த பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார் என்றும், அந்த மருத்துவமனையில், அந்த தளத்தில் உள்ள ஒரே நோயாளி அவர் மட்டும் தான் எனவும் செய்திகள் தெரிவித்தன.

    இந்த நிலையில், தாவூதின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷகீல், "இது வெறும் வதந்தி. பாய் பூரண நலத்துடன் இருக்கிறார்" என கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

    card 2

    ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல்படும் தாவுத் 

    உளவுத்துறை வட்டாரங்களும், தாவுத் விஷம் வைத்து கொல்ல முயற்சிகள் நடந்திருக்கும் என்பதை மாறுகிறது.

    காரணம், தாவூதை சுற்றி கடுமையான பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளது எனவும். அதில் முதல் கட்டமாக தாவூதின் விசுவாசிகள் இருப்பார்கள் எனவும், அடுத்தகட்ட பாதுகாப்பில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இருக்கிறது எனவும் கூறுகிறார்கள்.

    இந்தியாவிற்கு எதிரான ஜிகாத் தீவிரவாதத்தை, தாவூதின் ஆதரவில் தான் பாகிஸ்தான் செயல்படுத்துகிறது என்றும், அதனால், அவரது நலனில் பாகிஸ்தான் மிகுந்த பாதுகாப்போடு இருக்கும் எனவும் சுட்டிக்காட்டுகிறது.

    எனினும் தாவுத் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்க கூடும் என்பதை மட்டும் அவர்கள் மறுக்கவில்லை.

    குறிப்பாக கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில், இந்தியாவிற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் பலரும் மர்மமான முறையில் கொல்லப்படுவதை அடுத்து, தாவுத் உடல்நலம் குறித்த சந்தேகங்கள் எழாமலில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உளவுத்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு  பாஜக
    இந்தியா மீது ஐசிசியிடம் புகாரளித்திருக்கும் பாகிஸ்தான், ஏன்? ஒருநாள் உலகக்கோப்பை
    இந்தியாவைச் சுற்றி உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் சீனா மற்றும் பாகிஸ்தான் சீனா
    4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இம்ரான் கான்

    உளவுத்துறை

    கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை கேரளா
    விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    உக்ரைன் உளவுத்துறை தலைவரின் மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல திட்டம்? உக்ரைன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025