NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி; விஷம் வைத்து கொல்ல சதி என தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி; விஷம் வைத்து கொல்ல சதி என தகவல்
    நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பலத்த பாதுகாப்புடன் கராச்சி மருத்துவமனையில் அனுமதி

    நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி; விஷம் வைத்து கொல்ல சதி என தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 18, 2023
    09:26 am

    செய்தி முன்னோட்டம்

    நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கடுமையான உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தாவூத் இப்ராஹிம் விஷம் வைத்து கொல்லப்பட சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகின.

    எனினும், அதை அவரது உதவியாளர் உறுதிப்படுத்தவில்லை என இந்தியா டுடே தெரிவிக்கிறது.

    தாவூத் இப்ராகிம், இரண்டு நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவர் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார் என்றும், அந்த மருத்துவமனையில், அந்த தளத்தில் உள்ள ஒரே நோயாளி அவர் மட்டும் தான் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அவரை சந்திக்க அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அந்த மாடிக்கு செல்ல அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது.

    card 2

    துபாயிலிருந்து, பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்த தாவூத்

    இந்த சூழலில், தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த கூடுதல் தகவல்களை பெற இந்தியாவில் உள்ள அவரின் உறவினர்களான அலிஷா பார்கர் மற்றும் சஜித் வாக்லே ஆகியோரிடம் மும்பை போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

    கடந்த ஜனவரியில், தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்க்கரின் மகன், தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA), தாவூத் இப்ராஹிம் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகு கராச்சியில் தங்கியிருப்பதாக தெரிவித்தார்.

    என்ஐஏ, தாவூத் இப்ராஹிமுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில், அவரும் அவரது உயர்மட்ட உதவியாளர்களும் தான் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தை கட்டுப்படுத்துவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கும், சட்டவிரோத செயல்களுக்கும் முக்கிய குற்றவாளியாக தேடப்படுபவர் தாவூத் இப்ராஹிம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீவிரவாதிகள்
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தீவிரவாதிகள்

    பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்: 44 பேர் பலி பாகிஸ்தான்
    தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு 'இஸ்லாமிக் ஸ்டேட்'தான் காரணம்: பாகிஸ்தான் காவல்துறை  பாகிஸ்தான்
    பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் பலி  ஜம்மு காஷ்மீர்
    சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அமைப்புகள் திட்டம்  டெல்லி

    பாகிஸ்தான்

    கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சர்ச்சையை கிளப்பிய 'மேக் மை ட்ரிப்' விளம்பரம் இந்தியா
    'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு  பாஜக
    இந்தியா மீது ஐசிசியிடம் புகாரளித்திருக்கும் பாகிஸ்தான், ஏன்? ஒருநாள் உலகக்கோப்பை
    இந்தியாவைச் சுற்றி உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் சீனா மற்றும் பாகிஸ்தான் சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025