NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பூட்டான் கிராமங்களில், ஊடுருவி கட்டுமானங்களை மேற்கொள்ளும் சீனா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பூட்டான் கிராமங்களில், ஊடுருவி கட்டுமானங்களை மேற்கொள்ளும் சீனா
    கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனா மேற்கொண்டாக கட்டுமானங்கள்.

    பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பூட்டான் கிராமங்களில், ஊடுருவி கட்டுமானங்களை மேற்கொள்ளும் சீனா

    எழுதியவர் Srinath r
    Dec 11, 2023
    11:37 am

    செய்தி முன்னோட்டம்

    பூட்டான் சீனா இடையே முறையாக தங்கள் எல்லையை நிர்ணிப்பதற்காக எல்லைப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், வடக்கு பூட்டானின் ஜகர்லுங் பள்ளத்தாக்கில் அனுமதியற்ற கட்டுமான நடவடிக்கைகளை பெய்ஜிங் தொடர்ந்து வருகிறது.

    பூட்டானின் கிழக்கு எல்லையான அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதியில், சீனாவின் ஊடுருவலை இதுவரை வெளியிடப்பட்டதில் மிகக் கூர்மையான செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

    மாக்சர் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களில், ஜகர்லுங் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா கடந்த இரண்டு ஆண்டுகள் மேற்கொண்ட கட்டுமானங்களை பார்க்க முடிகிறது.

    2nd card

    129 புதிய குடியிருப்புகளை ஏற்படுத்திய சீனா

    டிசம்பர் 7ல் வெளியிடப்பட்ட சமீபத்திய படங்கள், ஒரு குடியேற்றத்தில் சுமார் 129 குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் அருகிலுள்ள மற்றொரு பகுதியில் சுமார் 62 கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

    குறிப்பிடத்தக்க வகையில், ஆகஸ்ட் 2021ல் எடுக்கப்பட்ட படங்களில் இந்தக் கட்டிடங்கள் இல்லை.

    பிராந்திய மோதல்களைத் தீர்க்கும் முயற்சியில் சீனா- பூட்டான் தீவிர ஈடுபாட்டுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வரும் நிலையில், சீனா ஊடுருவல்களில் ஈடுபட்டு வருகிறது.

    "இந்த நடவடிக்கையின் முழுமையான அளவு, தனிமைப்படுத்தப்பட்ட இந்த கிராமங்கள் மட்டுமே அல்ல,"

    "மாறாக சீனாவின் பிராந்திய அபிலாஷைகளை ஆதரிக்கும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் ஒருங்கிணைந்த கூறுகள் என்பதை வலியுறுத்துகிறது" என பூட்டானில் சீனா ஊடுருவல்கள் பற்றி எழுதும் டேமியன் சைமன் தெரிவித்துள்ளார்.

    3rd card

    சீன ஊடுருவல்களால் இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?

    பூட்டான் மற்றும் சீனா முன்னதாக, நிலப்பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டு வந்தனர்..

    அதில், ஜகார்லுங் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலப்பரப்பு, தெற்கே மேலும் அமைந்துள்ள டோக்லாம் பீடபூமிக்கு சீனா தனது உரிமையை விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், பரிமாற்றிக் கொள்ளப்படும்.

    மேலும் இந்த ஒப்பந்தம் கைவிடப்படவில்லை என்பதை, பிரதமர் லோடே ஷெரிங் தி ஹிந்து உடனான நேர்காணலில் உறுதி செய்தார்.

    இந்நிலையில், பூட்டானுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தம், இந்தியாவுக்கு ஏற்படுத்தப் போகும் சாத்தியமான விளைவுகளைப் பற்றிய கவலைகளை எழுப்புகிறது.

    குறிப்பாக இந்தியாவை அதன் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் சிலிகுரி காரிடார் அருகே, பூட்டானின் பிராந்தியங்களில் சீனாவின் விரிவாக்கத்தை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பூட்டான்
    சீனா
    அருணாச்சல பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பூட்டான்

    பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள் கேரளா
    இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ள நடிகை சமந்தா சமந்தா ரூத் பிரபு

    சீனா

    குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்புடன் இந்தியாவில் முதலில் வெளியாகும் 'ஐகூ 12' ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன்
    சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார் பிரதமர்
    இந்திய படைகள் மாலத்தீவுகளை விட்டு வெளியேற வேண்டும்: அதிபர் முகமது முய்ஸோ அறிவிப்பு  இந்தியா
    Sports RoundUp- உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரம் மற்றும் பல முக்கிய செய்திகள் சென்னை

    அருணாச்சல பிரதேசம்

    அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இந்தியா
    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு இந்திய ராணுவம்
    அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா இந்தியா
    அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு சீனா

    இந்தியா

    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர் அமெரிக்கா
    2024ம் ஆண்டுக்கான 'Indian Car of the Year' விருதுக்கு போட்டியிடும் கார்கள்  ஆட்டோமொபைல்
    மத்திய பிரதேச பொது செயலாளர் கமல்நாத்தை பதவி நீக்க இருக்கிறதா காங்கிரஸ்? மத்திய பிரதேசம்
    பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025