NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் தொடர்புபடுத்தும் அறிக்கை தவறானது: கனடா
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் தொடர்புபடுத்தும் அறிக்கை தவறானது: கனடா
    ஊடகங்களில் வெளியான செய்திகளை கனேடிய அரசு நிராகரித்துள்ளது

    நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் தொடர்புபடுத்தும் அறிக்கை தவறானது: கனடா

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 22, 2024
    10:07 am

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்லும் சதித்திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை கனேடிய அரசு நிராகரித்துள்ளது.

    சில தினங்களுக்கு முன்னர் கனேடிய செய்தித்தாளில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகள், பெயரிடப்படாத தேசிய பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சதிக்கு மூளையாக இருப்பதாக குற்றம் சாட்டியது.

    மேலும், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இந்த திட்டம் குறித்து அறிந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அதிகாரப்பூர்வ அறிக்கை

    இந்திய அதிகாரிகளுக்கு எதிராக கனடா எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை

    வெள்ளிக்கிழமை, கனேடிய அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

    அதன்படி, பிரதமர் மோடி அல்லது அவரது உயர் அதிகாரிகளை குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்கள் பற்றிய அறிவை மறுத்துள்ளது.

    "அக்டோபர் 14ஆம் தேதி....இந்திய அரசாங்கத்தின் முகவர்களால் கனடாவில் கடுமையான குற்றச் செயல்கள் நடந்ததாகப் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அசாதாரண நடவடிக்கையை ஆர்சிஎம்பி மற்றும் அதிகாரிகள் எடுத்தனர்."

    "கனடாவிற்குள் நடந்த கடுமையான குற்றச் செயல்களில் பிரதமர் மோடியையோ... ஜெய்சங்கரையோ அல்லது என்எஸ்ஏ தோவலையோ தொடர்புபடுத்துவது குறித்து கனடா அரசு கூறவில்லை, ஆதாரம் எதுவும் தெரியவில்லை" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    குற்றச் சாட்டுக்கள்

    வன்முறைக் குற்றங்களில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதாக RCMP குற்றம் சாட்டுகிறது

    அக்டோபர் 14 அன்று கனடாவில் நடந்த வன்முறைக் குற்றங்களில் இந்திய அரசாங்கத்தின் பெயரிடப்படாத முகவர்கள் ஈடுபட்டதாக ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) குற்றம் சாட்டியது. ஜூன் 2023 இல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிஜ்ஜாரின் கொலையும் இதில் அடங்கும்.

    RCMP கமிஷனர் Michael Duheme, கனேடியர்களுக்கு "கடுமையான பொது அச்சுறுத்தலை" ஏற்படுத்தக்கூடிய செயல்களுடன் இந்த முகவர்களை இணைத்துள்ள சான்றுகள் மற்றும் இதுபோன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள் முன்வருமாறு வலியுறுத்தினார்.

    இராஜதந்திர வீழ்ச்சி

    நிஜ்ஜார் வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளை கனடா வெளியேற்றியது

    நிஜ்ஜாரின் கொலை தொடர்பான RCMP இன் விசாரணைக்குப் பிறகு, கனடா ஆறு இந்திய தூதர்களை வெளியேற்றியது.

    அவர்களை இந்த வழக்கில் "ஆர்வமுள்ள நபர்கள்" என்று அடையாளம் கண்டுள்ளது.

    கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, "மிகுந்த, தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்களின்" அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

    இந்திய இராஜதந்திரிகளுக்கும், புது தில்லியின் உத்தரவின் பேரில் கனேடியர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளையும் கண்டறிந்ததாக RCMP கூறியது.

    இராஜதந்திர பதட்டங்கள்

    இந்தியா குற்றச்சாட்டுகளை நிராகரித்து, தனது தூதர்களை திரும்பப் பெற்றது

    மத்திய அரசு இந்த குற்றச்சாட்டுகளை "மோசமான குற்றச்சாட்டுகள்" என்று நிராகரித்தது மற்றும் கனடாவில் இருந்து எஞ்சியிருந்த தூதரக அதிகாரிகளை எதிர்ப்பில் திரும்பப் பெற்றது.

    இந்த சம்பவம் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கியது.

    கடந்த ஆண்டு நிஜ்ஜாரின் மரணத்தில் இந்தியாவின் தொடர்பு குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ "நம்பகமான குற்றச்சாட்டுகள்" பற்றி பேசியதை அடுத்து ஏற்கனவே விரிசல் ஏற்பட்டது.

    மே 2024 இல், நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக நான்கு இந்தியர்கள் மீது முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    பிரதமர்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரதமர் மோடி

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்; குவாட் கூட்டறிக்கையில் வலியுறுத்தல் குவாட் குழு
    கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு 7.5 மில்லியன் டாலர்; குவாட் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு குவாட் குழு
    செப்டம்பர் 27இல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; எதற்காகத் தெரியுமா? மு.க.ஸ்டாலின்
    லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரில் இரண்டு புதிய இந்திய தூதரகங்கள்: பிரதமர் மோடி அமெரிக்கா

    பிரதமர்

    கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து கச்சத்தீவு
    4 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம் பிரதமர் மோடி
    "நன்றி சென்னை.. இன்றைய நாள் சிறப்பான நாள்": சென்னை ரோடு ஷோ குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு பிரதமர் மோடி

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை  ஏர் இந்தியா
    காலிஸ்தான் பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய முயற்சி: இந்திய அரசை சந்தேகிக்கும் அமெரிக்கா அமெரிக்கா
    இந்திய தூதரை வழி மறித்து தகராறு செய்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்: நியூயார்க்கில் பரபரப்பு  அமெரிக்கா
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணை: அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா, ஏன் கனடாவுக்கு ஒத்துழைக்கவில்லை? இந்தியா

    ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

    இந்தியா vs கனடா: சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா யார்? கனடா
    இந்தியாவிற்கு எதிரான கனடாவின் 'கடுமையான குற்றச்சாட்டுகளை' ஆதரிக்கும் Five Eyes நட்பு நாடுகள் கனடா
    நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக கனடாவிடம் 'வலுவான ஆதாரம் இல்லை'; ஒப்புக்கொண்ட ட்ரூடோ கனடா
    'பிஷ்னோய் கும்பலை நாடு கடத்த வேண்டும் என கனடாவிடம் கூறப்பட்டது; ஆனால்..':  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025