NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பங்களாதேஷ் பிரதமர் ராஜினாமா, நாட்டை விட்டு வெளியேறினார்; அடுத்து என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பங்களாதேஷ் பிரதமர் ராஜினாமா, நாட்டை விட்டு வெளியேறினார்; அடுத்து என்ன?
    பங்களாதேஷ் பிரதமர் ராஜினாமா

    பங்களாதேஷ் பிரதமர் ராஜினாமா, நாட்டை விட்டு வெளியேறினார்; அடுத்து என்ன?

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 05, 2024
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது சகோதரியுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டதாக பிபிசி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

    பங்களாதேஷில் கொண்டுவரப்பட்ட புதிய இட ஒதுக்கீட்டிற்கு எதிராக கடந்த ஜூலை முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் ஏற்கனவே 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) முதல் நடந்த புதிய போராட்டத்தில் கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்டனர்.

    நாடு தழுவிய ஊரடங்கு அறிவித்த நிலையிலும், மாணவர்கள் டாக்காவை நோக்கி அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்து முன்னேறிய நிலையில், அந்நாட்டு ராணுவமும் அரசுக்கு எதிராக திரும்பியது.

    ராணுவத்தின் பிடியில் அரசு

    ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் பங்களாதேஷ் ராணுவம்

    பங்களாதேஷில் நிலைமை மோசமடைந்த நிலையில், 45 நிமிடத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறுமாறு அந்நாட்டு ராணுவம் பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.

    இந்நிலையில், ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர் பதவியை விட்டு வெளியேறி, ராணுவ ஹெலிகாப்டரில் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி விரைவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    அப்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஆட்சியை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பங்களாதேஷ் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண சூழல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஷேக் ஹசீனா ராஜினாமா

    #BREAKING

    Sheikh Hasina resigns as Prime Minister of #Bangladesh

    She has left Dhaka in a military helicopter after thousands broke into her residence in Dhaka. Reports claim Hasina is headed to Bengal, India!

    Hasina is likely to tender her official resignation amid the… pic.twitter.com/T3pA9UCpT5

    — Nabila Jamal (@nabilajamal_) August 5, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    பிரதமர்
    போராட்டம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பங்களாதேஷ்

    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம்  உலகம்
    பங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும் சுற்றுலா
    ஆசிய கோப்பை BANvsPAK : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு ஆசிய கோப்பை
    BANvsPAK: பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 200 ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்  ஆசிய கோப்பை

    பிரதமர்

    2 நாள் சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    ககன்யான் விண்வெளி பயணத்துக்குத் தயாராகும் வீரர்கள் பட்டியலை இன்று பிரதமர் வெளியிடுவார் ககன்யான்
    சீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்; அனிதாவின் செயலால் விழிபிதுங்கும் திமுக திமுக
    இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு பயணப்படவுள்ள விண்வெளி வீரர்கள் யார்? அவர்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை ககன்யான்

    போராட்டம்

    சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது  கைது
    ஈரானை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு ஈரான்
    கர்நாடகத்தை கண்டித்து டெல்டா விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு தமிழ்நாடு
    காவிரி விவகாரம்: தமிழக டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025