NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பெண் கல்வி மீதான தடையே மக்கள் விலகி இருக்க காரணம்- தாலிபான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண் கல்வி மீதான தடையே மக்கள் விலகி இருக்க காரணம்- தாலிபான்

    பெண் கல்வி மீதான தடையே மக்கள் விலகி இருக்க காரணம்- தாலிபான்

    எழுதியவர் Srinath r
    Dec 08, 2023
    11:30 am

    செய்தி முன்னோட்டம்

    தாலிபான்களிடம் இருந்து மக்கள் விலகி இருப்பதற்கு முக்கிய காரணம், பெண்கல்வி மீதான தொடர்ச்சியான தடையென, தாலிபானால் நியமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் துணை வெளியுறவு அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.

    அண்மையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர், ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள பெண் மாணவர்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, அறிவு இல்லாத சமூகம் 'இருண்ட' சமூகம் எனவும் தெரிவித்தார்.

    தலிபானின் எல்லைகள் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள, கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழாவில் ஷேர் முகமது இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.

    ௨ந்ட card

    கல்வி என்பது அனைவரின் உரிமை- ஸ்டானிக்சாய்

    தொடர்ந்து பேசிய அமைச்சர் ஸ்டானிக்சாய், "கல்வி என்பது அனைவரின் உரிமை. இறைவன் இயற்கையாக அனைவருக்கும் வழங்கிய உரிமை" எனவும் தெரிவித்தார்.

    "அந்த உரிமையை யாராவது மக்களிடமிருந்து பறிக்க முடியுமா?. இந்த உரிமையை யாராவது மீறினால், இது ஆப்கானியர்களுக்கு எதிரான அடக்குமுறையாகும்"

    "அனைவருக்கும் கல்வி நிறுவனங்களின் கதவுகளை மீண்டும் திறக்க முயற்சி செய்யுங்கள். இன்று, அண்டை நாடுகளுடனும், உலகத்துடனும் நமது ஒரே பிரச்சனை கல்விப் பிரச்சினையால் ஏற்படுகிறது."

    "ஒரு தேசம் நம்மிடமிருந்து தூரமாகி, நம் மீது வருத்தமடைகிறது என்றால், அதற்குக் கல்விப் பிரச்சினைதான் காரணம்." எனக் பேசினார்.

    3ரd கார்டு

    தாலிபான் ஆட்சியில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள்

    கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறியதை தொடர்ந்து, அந்நாட்டை தாலிபான்கள் கைப்பற்றின.

    தாலிபான்கள் ஆட்சியில், அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான கடுமையான அடக்குமுறை சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம், பெண்களுக்கு உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தாலிபான்களின் சத்தியத்தை அவர்கள் மீறினர்.

    அதற்கு இரண்டு மாதங்களுக்கு பின்னர், பெண்களுக்கு முகத்திரை அணைவது கட்டாயமாக்கப்பட்டது.

    பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம், மகளிர் விவகாரங்கள் துறை அமைச்சகம் கலைக்கப்பட்டது. நவம்பர் மாதத்தில் பெண்கள் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தாலிபான்
    ஆப்கானிஸ்தான்
    அமெரிக்கா
    கல்வி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தாலிபான்

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்
    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை: தலிபான் உத்தரவு ஆப்கானிஸ்தான்
    ட்விட்டருக்கே தான் ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கும் தாலிபான் தலைவர் ட்விட்டர்

    ஆப்கானிஸ்தான்

    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி பாகிஸ்தான்
    பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு  உலகம்
    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  இந்தியா
    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 26 பேர் பலி, 40 பேரைக் காணவில்லை வெள்ளம்

    அமெரிக்கா

    ராணுவ பலத்தை அதிகரிக்க புதிதாக 31 நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா இந்திய ராணுவம்
    இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு இந்த வாரம் பயணிக்கிறார் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல்
    பயனாளர்களுக்கு அளித்த வந்த கட்டண வசதியான போஸ்ட் பிளஸ்ஸை நிறுத்தும் Tumblr சமூக வலைத்தளம்
    இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை விசா

    கல்வி

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் இந்தியா
    பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்  ஐஐடி
    தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் படிக்க வேண்டும்; மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் அமித் ஷா அமித்ஷா
    இணையத்தில் வைரலான வீடியோ, ஆசிரியரை பணிநீக்கம் செய்த அன்அகாடமி.. என்ன நடக்கிறது? ட்விட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025