NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை
    இது வெள்ளை மாளிகையின் இறுதி எச்சரிக்கையாக கருத வேண்டும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிகிறது

    இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 05, 2024
    02:40 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை எட்டுவதில் தாமதம் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இது வெள்ளை மாளிகையின் இறுதி எச்சரிக்கையாக கருத வேண்டும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இந்த போரில், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள முதல் கடுமையான நிலைப்பாடு இதுவாகும்.

    காசாவில், அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் உட்பட ஏழு உணவு உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல் சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

    காசா

    காசா போர் நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்த அமெரிக்கா

    33,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்ட காசாவில், இஸ்ரேலின் கொடிய தாக்குதலுக்கு அமெரிக்கா கவலை தெரிவித்ததுடன், ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் சுமார் 100 பணயக்கைதிகளை விடுவிக்க உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

    வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, பாலஸ்தீனிய குடிமக்களும், வெளிநாட்டு உதவிப் பணியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் அல்லது ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கான தனது ஆதரவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று பைடன், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் கூறினார்.

    பைடன் நிர்வாக அதிகாரிகள், அமெரிக்க ஜனாதிபதி, போருக்குப் பின் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி ஏதும் பேசவில்லை என்றும், நெதன்யாகு உடனான இந்த உரையாடல் நேரடியாகவும், நேர்மையாகவும் இருந்தது என்று தெரிவிக்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காசா
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அமெரிக்கா

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    காசா

    இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் என கருதும் அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ் நிறுவனர் யாஹ்யா சின்வாரை நெருங்கும் இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்த, 'வீரமான' பாகிஸ்தானிடம் உதவி கோரும் முக்கிய ஹமாஸ் தலைவர் ஹமாஸ்
    காசா போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க 'பிரிவு 99' ஐ பயன்படுத்திய ஐநா; அது என்ன பிரிவு 99? ஐநா சபை

    இஸ்ரேல்

    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா ஈரான்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம் ஜோ பைடன்
    இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடத்தில் எந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் இல்லை: வெறிச்சோடி கிடக்கும் பெத்லகேம் உலகம்
    டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு டெல்லி

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசாவில் தவறாக 3 பணயக் கைதிகளை கொன்ற இஸ்ரேல் இஸ்ரேல்
    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல் இஸ்ரேல்
    ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய 4 கிமீ நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு இஸ்ரேல்
    இஸ்ரேலால் தவறாகக் கொல்லப்பட்ட பணயக்கைதிகள் மீதமுள்ள உணவை பயன்படுத்தி அவசர செய்தி அனுப்பியது அம்பலம் இஸ்ரேல்

    அமெரிக்கா

    H-1 பி விசா உள்நாட்டு புதுப்பித்தல் திட்டம் அறிமுகம்; ஏப்ரல் 1 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் விசா
    H-1B, L-1 மற்றும் EB-5 விசாக்களுக்கான கட்டண உயர்வை அறிவித்தது அமெரிக்கா  விசா
    சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களின் 85 இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்  உலகம்
    அமெரிக்காவில் இந்திய மாணவரை அடித்து நொறுக்கிய கும்பல்: அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரி கடிதம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025