NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி
    மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி
    1/2
    உலகம் 1 நிமிட வாசிப்பு

    மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Sep 09, 2023
    09:21 am
    மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி
    இதுதான் பல ஆண்டுகளுக்கு பிறகு மொராக்கோவில் ஏற்படும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும்.

    வெள்ளிக்கிழமை மத்திய மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 296 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் குறைந்தது 296 பேர் உயிரிழந்ததாக மொராக்கோவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்த 153 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்." என்று பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.

    2/2

    'உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது': பிரதமர் மோடி 

    மேலும், பிரதமர் மோடி, "இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது." என்று மொராக்கோவிற்கு ஆதரவு கரங்களையும் நீட்டியுள்ளார். முதற்கட்ட நிலநடுக்கம் 11:11 மணியளவில் ஏற்பட்டது என்றும், அந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியது என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக மொராக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை நெட்வொர்க் கணக்கிட்டுள்ளது. இதுதான் பல ஆண்டுகளுக்கு பிறகு மொராக்கோவில் ஏற்படும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும். வட ஆபிரிக்காவில் பூகம்பங்கள் ஏற்படுவது ஒப்பீட்டளவில் அரிதானவை என்றாலும், 1960இல் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது அதனால், ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆப்பிரிக்கா
    நிலநடுக்கம்

    ஆப்பிரிக்கா

    மாலி நாட்டில் பயங்கரவாத துப்பாக்கி சூடு: 21 பொதுமக்கள் பலி உலகம்
    நைஜரில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல் மத்திய அரசு
    இந்தியாவில் தொடர்ந்து பலியாகும் சிறுத்தைகள்: கவலை தெரிவிக்கும் வெளிநாட்டு வல்லுநர்கள்  இந்தியா
    நைஜரில் திடீர் ராணுவ புரட்சி; அதிபரை வீட்டுச் சிறையில் வைத்த ராணுவம் ராணுவ அரசு

    நிலநடுக்கம்

    ஜம்மு காஷ்மீர்: குல்மார்க்கில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  ஜம்மு காஷ்மீர்
    ஜெய்ப்பூர்: அரை மணிநேரத்தில் தொடர்ந்து 3 நிலநடுக்கங்கள் ராஜஸ்தான்
    அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை  அமெரிக்கா
    டெல்லி உட்பட வட இந்திய பகுதிகளில் திடீர் நிலநடுக்கம்  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023