Page Loader
ஆஸ்திரேலிய தொடரில் 50 சதங்களை எட்டுவார் விராட் கோலி; சுரேஷ் ரெய்னா நம்பிக்கை
ஆஸ்திரேலிய தொடரில் 50 சதங்களை எட்டுவார் விராட் கோலி என சுரேஷ் ரெய்னா நம்பிக்கை

ஆஸ்திரேலிய தொடரில் 50 சதங்களை எட்டுவார் விராட் கோலி; சுரேஷ் ரெய்னா நம்பிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 12, 2023
06:47 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்களை விராட் கோலி முறியடிப்பார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது சதங்களின் எண்ணிக்கையை 47 ஆக உயர்த்தினார். மேலும், சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களுடன் சர்வதேச அளவில் அதிக சதமடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலையில், அதை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 3 சதங்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

suresh raina hope virat kholi

விராட் கோலி குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து

ஜியோ சினிமாவின் இன்சைடர்ஸ் லைவ் உரையாடலில் பங்கேற்று பேசிய சுரேஷ் ரெய்னா, "ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சிறந்த ஃபார்மில் தொடர்ந்து பேட்டிங் செய்கிறார். சச்சின் 49 மற்றும் விராட் 47 சதங்களுடன் உள்ளனர். நம்பர் 3 இடத்தில் பேட்டிங் செய்வதால் இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் அவர் தனது ஐம்பதாவது சதத்தை எட்ட முடியும் என்று நினைக்கிறேன்." என்று கூறினார். மேலும், கோலியின் மனநிலை மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து பேசிய ரெய்னா, "விராட் தனது குடும்பத்தினருடன் இருந்தபோது ஆம்ஸ்டர்டாமில் நான் அவரை சந்தித்து பேசினேன். நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், விராட் முழு மனதுடன் விளையாடுகிறார். மேலும் அந்த சமயத்தில் மட்டையால் பேச வைக்கிறார்." என்று கூறினார்.