NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / Sports RoundUp: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அபாரம்; இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    Sports RoundUp: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அபாரம்; இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்
    இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    Sports RoundUp: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அபாரம்; இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 27, 2023
    06:40 am

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக, போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 34வது ஓவரிலேயே 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாதும் நிசங்க 77 ரன்களும், சதீரா சமரவிக்ரம 65 ரன்களும் எடுத்து, அணிக்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

    India women football team loses to Japan

    ஜப்பானிடம் படுதோல்வியைத் தழுவிய இந்திய மகளிர் கால்பந்து அணி

    வியாழன் அன்று தாஷ்கண்டில் உள்ள லோகோமோடிவ் ஸ்டேடியத்தில் நடந்த ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச் சுற்று இரண்டாவது சுற்றின் சி பிரிவு ஆட்டத்தில் இந்திய கால்பந்து அணி 0-7 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வியைத் தழுவியது.

    ஜப்பானின் ஹொனோகா ஹயாஷி, மினா தனகா, மியாபி மோரியா, கிகோ செய்கே, ஹிகாரு நவோமோட்டோ, யோஷினோ நகாஷிமா கோல்களை அடித்தனர்.

    ஜப்பானுக்கு எதிரான தோல்வி, போட்டியின் ஆரம்பத்திலேயே இந்தியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

    இந்த போட்டியில் மூன்று வெவ்வேறு பிரிவுகளிலும் இருந்து முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் 2024 பிப்ரவரியில் திட்டமிடப்பட்ட பாரீஸ் 2024 ஒலிம்பிக் தகுதிச் சுற்றின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    India Cricket team to get new coach

    இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்

    ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

    ராகுல் டிராவிட் மீண்டும் பயிற்சியாளர் பதவியை ஏற்க ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படும் நிலையில், புதிய தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருகிறது.

    இந்நிலையில், ராகுல் டிராவிட் இல்லாத சமயங்களில் இந்திய அணியை வழிநடத்தும் விவிஎஸ் லக்ஷ்மண் நவம்பருக்கு பிறகு முழுநேர பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    India scripts medal history in para asian games 2023

    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு படைத்த இந்தியா

    சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், வியாழக்கிழமை அன்று போட்டியின் நான்காம் நாளில் இந்தியா 73வது பதக்கத்தை கைப்பற்றியபோது புதிய சாதனை படைத்தது.

    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இதற்கு முன்னர் 2018இல் 72 பதக்கங்களை வென்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்த நிலையில், தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.

    இந்திய பாரா விளையாட்டு வீரர்களின் சாதனைக்கு பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, போட்டியின் நான்காம் நாள் முடிவில் இந்தியா 18 தங்கம், 23 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என மொத்தம் 82 பதக்கங்களை வென்றுள்ளது.

    IPL 2024 Auction likely to hold in Dubai

    ஐபிஎல் 2024 ஏலத்தை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டம்

    ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தை முதல்முறையாக, இந்தியாவிற்கு வெளியே துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மகளிர் ஐபிஎல் ஏலத்தை டிசம்பர் 9ஆம் தேதி டெல்லியில் நடத்த முடிவு செய்துள்ள பிசிசிஐ, அதன் பின்னர் ஆடவர் ஐபிஎல்லுக்கான வீரர்கள் ஏலத்தை வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

    இதன்படி டிசம்பர் 15 முதல் 19ஆம் தேதிக்குள் இந்த ஏலம் நடைபெறும் என்றும், இது ஒருநாள் மட்டுமே நடக்கும் மினி ஏலமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    எனினும், துபாயில் ஏலத்தை நடத்துவது தற்போது ஆலோசனையில் மட்டுமே உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டும் இஸ்தான்புல்லில் ஏலத்தை வைத்துக் கொள்ள ஆலோசித்துவிட்டு, கடைசியில் கொச்சியில் நடத்தப்பட்டதை போல் நடக்கவும் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    கிரிக்கெட்
    கால்பந்து
    இந்திய கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஒருநாள் உலகக்கோப்பை

    11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    ENGvsSA : தென்னாப்பிரிக்கா பேட்டிங் அபாரம்; இங்கிலாந்து அணிக்கு 400 ரன்கள் இலக்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    'அய்யயோ மீண்டும் மீண்டுமா' : தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்த இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    SLvsNED : சமரவிக்ரம அதிரடியால் ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பெற்றது இலங்கை கிரிக்கெட்

    கிரிக்கெட்

    SLvsNED : நெதர்லாந்திற்கு எதிராக இரண்டு கட்டாய மாற்றங்களை செய்த இலங்கை அணி ஒருநாள் உலகக்கோப்பை
    40 வருட கபில் தேவ்-சையது கிர்மானி ஜோடியின் சாதனையை முறியடித்த நெதர்லாந்து வீரர்கள் கிரிக்கெட் செய்திகள்
    ஒருநாள் உலகக்கோப்பை : நியூசிலாந்து போட்டிக்கு முன்னதாக அடுத்தடுத்து சிக்கலை எதிர்கொள்ளும் இந்திய அணி இந்திய கிரிக்கெட் அணி
    பக்கா பிளானோடு இறங்கணும்; நியூசிலாந்தை எதிர்கொள்வது குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து இந்திய கிரிக்கெட் அணி

    கால்பந்து

    பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர்: இன்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? கால்பந்து செய்திகள்
    இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரியின் 39வது பிறந்தநாள் இன்று; குவியும் வாழ்த்துக்கள் கால்பந்து செய்திகள்
    அதிக முறை ஹெட் கோல் அடித்து சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ கிறிஸ்டியானோ ரொனால்டோ
    சவூதி அரேபியாவின் அல் ஹிலால் அணிக்கு இடம் பெயரும் நெய்மர் ஜூனியர் சவூதி புரோ லீக்

    இந்திய கிரிக்கெட் அணி

    INDvsAFG : ஜஸ்ப்ரீத் பும்ரா அபார பந்துவீச்சு; இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 1,000 ரன்களை எட்டி ரோஹித் ஷர்மா சாதனை ரோஹித் ஷர்மா
    ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள்; டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    INDvsAFG : அபார வெற்றி பெற்ற இந்திய அணி; புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025