ரஜினிகாந்துக்கு ஒருநாள் உலகக்கோப்பை கோல்டன் டிக்கெட்டை வழங்கியது பிசிசிஐ
செய்தி முன்னோட்டம்
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செவ்வாய்கிழமை (செப்டம்பர் 19), இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கினார்.
செவ்வாயன்று பிசிசிஐ வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், ரஜினிகாந்தை சினிமாவைத் தாண்டிய பிரபலம் என்று பாராட்டியது.
மேலும், "ரஜினிகாந்த் மொழி மற்றும் கலாச்சாரத்தை கடந்து, மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார்.
தலைவர் 2023 உலகக்கோப்பையில் எங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார் என்பதையும், அவரது இருப்பைக் கொண்டு கிரிக்கெட்டை அதிக மக்களிடம் கொண்டு சேர்ப்பார் என்பதையும் அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கோல்டன் டிக்கெட்டுகளை விஐபிக்களுக்கு வழங்கி அதன்மூலம் உலகக்கோப்பையை விளம்பரப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
embed
ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ
The Phenomenon Beyond Cinema! 🎬 The BCCI Honorary Secretary @JayShah presented the golden ticket to Shri @rajinikanth, the true embodiment of charisma and cinematic brilliance. The legendary actor has left an indelible mark on the hearts of millions, transcending language and... pic.twitter.com/IgOSTJTcHR— BCCI (@BCCI) September 19, 2023