NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / புதிய சர்வதேச மைதானத்தைப் பெறும் வாரணாசி.. இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய சர்வதேச மைதானத்தைப் பெறும் வாரணாசி.. இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!
    புதிய சர்வதேச மைதானத்தைப் பெறும் வாரணாசி.. இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

    புதிய சர்வதேச மைதானத்தைப் பெறும் வாரணாசி.. இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 23, 2023
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. உத்திரபிரதேச மாநிலத்தில், கான்பூர் மற்றும் லக்னோவைத் தொடர்ந்து, மூன்றாவது கிரிக்கெட் மைதானமாக வாரனாசியில் புதிய மைதானம் கட்டப்படவிருக்கிறது.

    இது பிரதமர் மோடியின் சொந்த பாராளுமன்றத் தொகுதியாக இருப்பதைத் தொடர்ந்து, அவரே புதிய மைதானத்திற்கான அடிக்கல்லை இன்று நாட்டவிருக்கிறார். மேலும், இன்று உத்தரபிரதேச அரசுத் திட்டத்தின் கீழ் கட்டமைப்பட்டிருக்கும் 16 புதிய பள்ளிகளையும் திறந்து வைக்கவிருக்கிறார் பிரதமர் மோடி.

    புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் இன்றைய நிகழ்வில், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, துணைத் தலைவர் ராஜீவ் ஷூக்லா மற்றும் செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிரிக்கெட்

    இந்தியாவின் புதிய உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம்: 

    ரூ.121 கோடி மதிப்புடைய நிலத்தில், ரூ.330 கோடி செலவில் புதிய சர்வதேச மைதானம் கட்டமைக்கப்படவுள்ளதாக பத்திரிகை வெளியீட்டில் உத்திர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

    ஒரே நேரத்தில் 30,000 பேர் வரை அமரும் வசதி கொண்டு கட்டப்படவிருக்கும் இந்த மைதானத்தின் மேற்பகுதியானது பிறை நிலவு வடிவிலும், ஒளி வழங்கும் ஃப்ளட்லைட் அமைப்பானது சூலாயுத வடிவிலும் வடிவமைக்கப்படவிருக்கிறது.

    மேலும், வாரணாசியில் கட்டப்படவிருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் வடிவமைப்பானது காசியின் சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் இருக்கும் எனவும் உத்திர பிரதேச மாநில அரசின் பத்திரிகை வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2025ம் ஆண்டு டிசம்பருக்குள், இந்தப் புதிய மைதானத்தின் கட்டமைப்பு முடிவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    பிரதமர் மோடி
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கிரிக்கெட்

    IND vs BAN : இந்தியாவுக்கு 266 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேசம் ஆசிய கோப்பை
    ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் கிளென் மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிக்கு ஆண் குழந்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    INDvsBAN : ஷுப்மன் கில் சதம் வீண்; கடைசி ஓவரில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி ஆசிய கோப்பை
    Sports Round Up : ஐசிசி தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்; பேட்மிண்டனில் இந்திய ஜோடி தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள் இந்தியா

    பிரதமர் மோடி

    இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை  இந்தியா
    இன்று இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி: ஆசியான் உச்சி மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது? இந்தியா
    பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு குழுவின் இயக்குநர் அருண்குமார் சின்ஹா ​​காலமானார் இந்தியா
    'உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்': பிரதமர் மோடி  திமுக

    இந்தியா

    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: நாட்டையே உலுக்கப்போகும் அறிவிப்புகள் நாளை வெளியாகுமா? நாடாளுமன்றம்
    பழைய நாடாளுமன்றத்தின் நினைவுகளை உருக்கமான கடிதங்களாக எழுதிய 10 பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றம்
    'சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முடிவுகள் எடுக்கப்படும்': பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    சட்டப்பிரிவு 370, ஜிஎஸ்டி: நாடாளுமன்றத்தின் முக்கிய மசோதாக்களை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025