இந்திய வில்வித்தை அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக இந்திய வில்வித்தைக்கு ஒரு பெரிய ஊக்கமளிக்கும் வகையில், தேசிய வில்வித்தை கூட்டமைப்பு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பயிற்சியாளர் பேக் வூங் கியை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்துள்ளது. லண்டன் ஒலிம்பிக்கில் பெண்கள் தனிநபர் மற்றும் குழுப் பிரிவுகளில் தனது நாட்டிற்கு இரட்டை தங்கப் பதக்கம் வென்ற அணிக்கு பயிற்சியளிக்க தென் கொரியர் பேக் வூங் கி, செவ்வாய்கிழமை முதல் துருக்கியின் அன்டலியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையின் ரிகர்வ் ஸ்டேஜ் 1-ல் தனது பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளார். 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு இந்தியா வெளிநாட்டுப் பயிற்சியாளரை நியமிப்பது இதுவே முதல்முறையாகும்.
உலகக் கோப்பை போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வீரர்கள்
ஆடவர் ரிகர்வ் பிரிவு : பி தீராஜ், அதானு தாஸ், தருணீப் ராய், நீரஜ் சவுகான் மகளிர் ரிகர்வ் பிரிவு : பஜன் கவுர், அதிதி ஜெய்ஸ்வால், அங்கிதா பகத், சிம்ரஞ்சித் கவுர் ஆடவர் கூட்டு பிரிவு : பிரத்மேஷ் ஜவ்ஹர், ரஜத் சவுகான், ஓஜஸ் தியோடலே, ரிஷப் யாதவ் மகளிர் கூட்டு பிரிவு : அவ்னீத் கவுர், வி ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, சாக்ஷி சவுத்ரி. ஆடவர் கூட்டு பிரிவில் வாய்ப்பை இழந்த மிகப்பெரிய இந்திய வீரர் அபிஷேக் வர்மா (உலக நம்பர் 13). இவர் ஐந்து முறை உலகக் கோப்பை தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் முன்னாள் உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஆவார்.