Page Loader
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் விளையாடுவதில் தவறேதுமில்லை: ரோஹித் ஷர்மா
இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை கடந்த 2007-ஆம் ஆண்டு விளையாடியது

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் விளையாடுவதில் தவறேதுமில்லை: ரோஹித் ஷர்மா

எழுதியவர் Venkatalakshmi V
Apr 18, 2024
04:21 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே வழக்கமான இருதரப்பு டெஸ்ட் தொடர் நடத்துவதில் தவறேதுமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை கடந்த 2007-ஆம் ஆண்டு விளையாடியது. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி விளையாட்டு உலகில் மிகவும் தீவிரமான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இரு நாடுகளின் அரசியல் வரலாற்றில் வேரூன்றிய இந்தப் போட்டி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டியுடன் பெரும்பாலும் ஒப்பிடப்படுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 2007 இல் இருதரப்பு டெஸ்ட் தொடரில் விளையாடியபோது பாகிஸ்தான் வந்து 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இரு அணிகளும் ஐசிசி உலகக் கோப்பைகள் மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே சந்திக்கின்றன.

embed

இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்

Rohit Sharma 🗣️ #Sportify #SportsNews #Cricket #RohitSharma #BabarAzam #India #Pakistan #INDvsPAK 🏏🏆 pic.twitter.com/sRyJwjdWg8— Sportify (@Sportify777) April 18, 2024