Page Loader
டி.குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
டி.குகேஷிற்கு கேல் ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

டி.குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

எழுதியவர் Sekar Chinnappan
Jan 17, 2025
01:52 pm

செய்தி முன்னோட்டம்

வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின விழாவில், இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் உலக சதுரங்க சாம்பியன் டி.குகேஷ் ஆகியோருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மதிப்புமிக்க மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகளை வழங்கினார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று வரலாறு படைத்த மனு பாக்கர், ஒரே ஒலிம்பிக்கில் பல தனிநபர் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். சென்னையைச் சேர்ந்த 19 வயது செஸ் விளையாட்டு வீரர் டி.குகேஷ் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் டிங் லிரெனை தோற்கடித்து, உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

அர்ஜூனா விருது

அர்ஜூனா விருது வென்ற வீரர்கள்

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் தங்கப் பதக்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. விழாவில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழகத்தின் துளசிமதி, மனிஷா, நித்ய ஸ்ரீ மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் உள்ளிட்ட 32 விளையாட்டு வீரர்கள் அர்ஜூனா விருதைப் பெற்றனர். முன்னதாக, கேல் ரத்னா பரிந்துரை பட்டியலில் மனு பாக்கரின் பெயர் ஆரம்ப பரிந்துரை பட்டியலில் விடுபட்டது சர்ச்சைக்குரியதாக இருந்தபோதிலும், அவர் தனது கவனக்குறைவால் அது நேர்ந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், பாராட்டுகளை விட தேசத்திற்காக விளையாடுவதில் கவனம் செலுத்துவதை வலியுறுத்தினார்.

ட்விட்டர் அஞ்சல்

டி.குகேஷ் விருது பெறும் காணொளி

ட்விட்டர் அஞ்சல்

மனு பாக்கர் விருது பெறும் காணொளி