NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஒடிசா ரயில் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய இந்திய கால்பந்து அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒடிசா ரயில் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய இந்திய கால்பந்து அணி
    ஒடிசா ரயில் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய இந்திய கால்பந்து அணி

    ஒடிசா ரயில் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய இந்திய கால்பந்து அணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 19, 2023
    06:42 pm

    செய்தி முன்னோட்டம்

    இண்டர்காண்டினென்டல் கோப்பையை வென்றதற்காக ஒடிசா அரசிடம் இருந்து பெற்ற ரூ.1 கோடி பரிசில் ஒரு பகுதியை பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு வழங்க இந்திய கால்பந்து அணி முடிவு செய்துள்ளது.

    இறுதிப் போட்டியில் லெபனானை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில், போட்டியை நடத்த உதவிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்திய வெற்றி பெற்ற உடனேயே அணிக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு அறிவித்தார்.

    இந்நிலையில், ஒடிசாவின் பாலசோரில் நடந்த கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்குவதாக இந்திய கால்பந்து அணி அறிவித்துள்ளது.

    போட்டியில் வெற்றி பெற்ற உடனேயே வீரர்கள் ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளது.

    indian football team tweet

    இந்திய கால்பந்து அணியின் ட்வீட்

    இந்திய அணி வெளியிட்டுள்ள ட்வீட்டில் "எங்கள் வெற்றிக்காக அணிக்கு ரொக்கப் போனஸ் வழங்கிய ஒடிசா அரசுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

    டிரஸ்ஸிங் அறையின் உடனடி மற்றும் கூட்டு முடிவின்படி, அதில் ரூ. 20 லட்சத்தை இந்த மாத தொடக்கத்தில் மாநிலத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளோம்.' எனத் தெரிவித்துள்ளது.

    மேலும் மற்றொரு ட்வீட்டில், "மக்கள் சந்தித்த இழப்பிற்கு எதுவும் ஈடுசெய்ய முடியாது, ஆனால் குடும்பங்கள் மிகவும் கடினமான காலங்களில் சமாளிக்க இது சிறிய அளவில் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்
    ஒடிசா
    இந்திய அணி

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    கால்பந்து

    செல்ஃபி எடுக்க முயன்ற எதிரணி ஊழியரை தள்ளிவிட்ட ரொனால்டோ! வைரலாகும் காணொளி! கால்பந்து செய்திகள்
    ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023 : குழு 'பி'ல் இடம் பெற்றது இந்தியா! கால்பந்து செய்திகள்
    ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி அபாரம்! லா லிகா கோப்பையை கைப்பற்றியது பார்சிலோனா! கால்பந்து செய்திகள்
    ஏடிகே மோஹுன் பாகன் கால்பந்து அணியின் பெயர் மாற்றம்! வெளியானது அறிவிப்பு! கால்பந்து செய்திகள்

    கால்பந்து செய்திகள்

    மன்னிப்பு கேட்டு மீண்டும் பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணியில் இணைந்த லியோனல் மெஸ்ஸி கால்பந்து
    எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 : ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்! கால்பந்து
    பிரபல கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! பின்னணி என்ன? கால்பந்து
    ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் குரூப் சி'யில் இடம் பெற்றுள்ள இந்திய கால்பந்து அணி! இந்திய அணி

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் இந்தியா
    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்! இந்தியா

    இந்திய அணி

    ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : ஒரே நாளில் 2 வெள்ளி பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா! உலக கோப்பை
    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெண்கலம் வென்றார்! உலக கோப்பை
     எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக் : 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு! ஹாக்கி போட்டி
    இந்திய வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி! சுதிர்மான் கோப்பையில் இருந்து வெளியேறியது! பிவி சிந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025