NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'போதைப்பொருள் சோதனைக்கு தயார், ஆனால் ஒரு நிபந்தனை' : மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'போதைப்பொருள் சோதனைக்கு தயார், ஆனால் ஒரு நிபந்தனை' : மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்
    மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் போதைப்பொருள் சோதனைக்கு தயார்

    'போதைப்பொருள் சோதனைக்கு தயார், ஆனால் ஒரு நிபந்தனை' : மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 22, 2023
    12:11 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண போதைப்பொருள் சோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒத்துக் கொண்டுள்ளார்.

    இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (மே 21) பேசிய பிரிஜ் பூஷன் சரண் சிங், "போதைப்பொருள் சோதனை, பாலிகிராஃப் சோதனை அல்லது உண்மை கண்டறிதல் சோதனை என அனைத்திற்கும் தயாராகவே இருக்கிறேன்.

    ஆனால் என்னுடன் வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரும் இந்த சோதனைகளுக்கு உட்பட வேண்டும் என்பதுதான் எனது நிபந்தனை.

    இரு மல்யுத்த வீரர்களும் தங்களை சோதனை செய்யத் தயாராக இருந்தால், பின்னர் அழைக்கவும். நானும் இதற்கு தயாராக இருக்கிறேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று கூறினார்.

    farmers support wrestlers protest

    மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய விவசாயிகள்

    கடந்த ஜனவரியில் முதல்முறையாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தியபோது அவர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு கூறியதன் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    எனினும் சொன்னபடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் முதல் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஹரியானாவின் மெஹாமில் விவசாயிகள் நடத்திய காப் பஞ்சாயத்து கூட்டத்தில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, பிரிஜ் பூஷன் சரண் சிங் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்திய அணி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    நடு வானில் கடுமையாக குலுங்கிய ஏர் இந்தியா விமானம்: பல பயணிகள் காயம்  ஏர் இந்தியா
    கேன்ஸ் திரைப்பட விழாவில் வேஷ்டி சட்டையுடன் வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன்  பிரான்ஸ்
    இந்தியாவின் 1% செல்வந்தர்களில் ஒருவராக சேர உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை!  உலகம்
    இந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை  என்ஐஏ

    இந்திய அணி

    லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் : அடுத்த 3 மாதம் ரெஸ்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    உலகக்கோப்பை வில்வித்தை 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா இந்தியா
    'போடியம் முதல் போராட்டம் வரை' : டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் இந்தியா
    ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதலிடம் : இந்திய வீரர்களின் நிலை என்ன? நோவக் ஜோகோவிச்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025