NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'போதைப்பொருள் சோதனைக்கு தயார், ஆனால் ஒரு நிபந்தனை' : மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்
    'போதைப்பொருள் சோதனைக்கு தயார், ஆனால் ஒரு நிபந்தனை' : மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்
    1/2
    விளையாட்டு 0 நிமிட வாசிப்பு

    'போதைப்பொருள் சோதனைக்கு தயார், ஆனால் ஒரு நிபந்தனை' : மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 22, 2023
    12:11 pm
    'போதைப்பொருள் சோதனைக்கு தயார், ஆனால் ஒரு நிபந்தனை' : மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்
    மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் போதைப்பொருள் சோதனைக்கு தயார்

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண போதைப்பொருள் சோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒத்துக் கொண்டுள்ளார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (மே 21) பேசிய பிரிஜ் பூஷன் சரண் சிங், "போதைப்பொருள் சோதனை, பாலிகிராஃப் சோதனை அல்லது உண்மை கண்டறிதல் சோதனை என அனைத்திற்கும் தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்னுடன் வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரும் இந்த சோதனைகளுக்கு உட்பட வேண்டும் என்பதுதான் எனது நிபந்தனை. இரு மல்யுத்த வீரர்களும் தங்களை சோதனை செய்யத் தயாராக இருந்தால், பின்னர் அழைக்கவும். நானும் இதற்கு தயாராக இருக்கிறேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று கூறினார்.

    2/2

    மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய விவசாயிகள்

    கடந்த ஜனவரியில் முதல்முறையாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தியபோது அவர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு கூறியதன் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனினும் சொன்னபடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் முதல் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஹரியானாவின் மெஹாமில் விவசாயிகள் நடத்திய காப் பஞ்சாயத்து கூட்டத்தில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, பிரிஜ் பூஷன் சரண் சிங் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    இந்திய அணி

    இந்தியா

    பிஜி நாட்டின் உயரிய கவுரவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது  நரேந்திர மோடி
    இன்றைய தங்க விலை நிலவரம்! தங்கம் வெள்ளி விலை
    பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி  உலகம்
    கூகுளின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கிறதா மத்திய அரசு? கூகுள்

    இந்திய அணி

    '18ஆம் எண்ணுடன் பிரபஞ்ச தொடர்பு' : ஜெர்சி நம்பர் குறித்து உருகிய விராட் கோலி! விராட் கோலி
    ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் குரூப் சி'யில் இடம் பெற்றுள்ள இந்திய கால்பந்து அணி! இந்தியா
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய அணியின் மேலாளராக அனில் படேல் நியமனம் டெஸ்ட் மேட்ச்
    ஏழாவது இடம்! உலக தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்! பேட்மிண்டன் செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023