சென்ற ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம்: மீண்டும் ஆக. 31-ல் சென்னையில் தொடக்கம்
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஃபார்முலா கார் பந்தயம் அப்போது பெய்த மிஃக்ஜாம் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிலையில் தற்போது அந்த கார் பந்தயம் மீண்டும் ஆகஸ்ட் 31ல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பந்தயம் சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் சாலைகளில், கிட்டத்தட்ட 3.5 கி.மீ. தூரத்திற்கு நடைபெறுகிறது. இந்தியாவில் முதல்முறையாக நடைபெற உள்ள ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4, தமிழக அரசு சார்பாக ரூ. 42 கோடி செலவில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.