Page Loader
16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் சர்வதேச ஹாக்கி போட்டி
16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் சர்வதேச ஹாக்கி போட்டி

16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் சர்வதேச ஹாக்கி போட்டி

எழுதியவர் Sekar Chinnappan
Apr 17, 2023
01:29 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டிகள் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் நடைபெற உள்ளதாக ஹாக்கி இந்தியா செயலாளர் போலாநாத் சிங் சென்னையில் திங்கட்கிழமை (ஏப்ரல் 17) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த ஆண்டு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. இதன் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஹாக்கி போட்டிகள் மீண்டும் சென்னை நகருக்குத் திரும்புகிறது. முன்னதாக, சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடைசியாக 2007 ஆம் ஆண்டு நடந்த ஆடவர் ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியே கடைசி சர்வதேச ஹாக்கி போட்டியாகும்.

Bolonath Singh thanks Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த போலாநாத் சிங் 

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போலோநாத் , "ஹாக்கியில் பெரிய அளவில் சென்னையில் போட்டிகள் நடத்தப்பட்டு நீண்ட நாட்களாகிறது. சர்வதேச ஹாக்கியை மீண்டும் சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார். முன்னதாக கடந்த வாரமே உதயநிதி ஸ்டாலின், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தை ஹாக்கி இந்தியா அமைப்பினர் ஆய்வு செய்தது குறித்து பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆசிய ஹாக்கி சாம்பியன் டிராபி என்பது ரவுண்ட்-ராபின் வடிவத்தில் ஆசிய கண்டத்தில் இருந்து முதல் ஆறு ஹாக்கி அணிகளைக் கொண்டு விளையாடப்படும்.