Page Loader
மைக்ரோசாஃப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெல்லாவின் ஊதியம் 63% அதிகரிப்பு
மைக்ரோசாஃப்ட் நிறுவன சிஇஓவின் ஊதியம் 63% அதிகரிப்பு

மைக்ரோசாஃப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெல்லாவின் ஊதியம் 63% அதிகரிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 25, 2024
06:45 pm

செய்தி முன்னோட்டம்

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெல்லா 2024ஆம் ஆண்டில் $79.106 மில்லியன் (சுமார் ₹665.15 கோடி) தொகையைப் பெறுவார் என்று நிறுவனம் யுஎஸ் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனில் தாக்கல் செய்தது. $7,91,06,183 தொகை, 2014இல் மைக்ரோசாஃப்டின் சிஇஓ ஆக ஆனதிலிருந்து அவர் பெற்ற அதிகபட்ச ஊதியம் இதுவாகும். இது முந்தைய ஆண்டை விட 63% அதிகமாகும். இந்த ஆண்டு ஜூலையில் நடந்த புளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் தோல்வி போன்ற இணைய பாதுகாப்பு சவால்கள் காரணமாக நாதெல்லா தனிப்பட்ட முறையில் தனது ஊதியத்தை குறைக்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும் இவை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.

புளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்

மைக்ரோசாப்டின் புளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் தோல்வி

ஜூலை 19, 2024 அன்று, பல வணிகங்கள் மற்றும் தனிப்பட்ட பயனர்கள் தங்கள் சாதனங்களில் புளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்தை அனுபவித்தனர். இது சிஸ்டம்களை மூட அல்லது மறுதொடக்கம் செய்ய வழிவகுத்தது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சைபர் செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட்ஸ்ட்ரைக்கின் தரப்பில் இருந்து வந்த தொழில்நுட்ப பிரச்சனையே இதற்குக் காரணமாகும். முன்னதாக, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஏப்ரல் மாதம், தொடர்ந்து பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை அறிவித்தது. அதற்காக நாதெல்லா தனிப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டார் மற்றும் தனது சொந்த ஊதிய தொகுப்பில் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான பட்ஜெட் மாற்றத்தை சரிசெய்யுமாறு கேட்டுக் கொண்டார். மைக்ரோசாஃப்ட் அதன் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக மாற்றியமைத்தது.