
யூரி காக்ரின் முதல் சுபன்ஷு சுக்லா வரை விண்வெளி பயணத்திற்கு எதற்காக போர் விமானிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்?
செய்தி முன்னோட்டம்
இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, குழுவினருடன் இன்று Axiom-4 மிஷன் மூலம் விண்வெளிக்கு பயணப்பட இருந்தார்.
எனினும் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த விண்கலத்தை இயக்கவுள்ள சுபன்ஷு ஷுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) செல்லவிருக்கும் இந்திய பாஸ்போர்டை கொண்ட முதல் விண்வெளி வீரராக உருவெடுத்துள்ளார்.
இவர், 1984-ல் சோவியத் யூனியன் 'சோயுஸ் T-11' விண்கலத்தில் பறந்த விங் கமாண்டர் ராகேஷ் சர்மாவுக்கு பிறகு, விண்வெளியில் பயணிக்கும் இரண்டாவது இந்தியர் ஆவார் என்பது உங்களுக்கு தெரிந்தது.
ஆனால், என்றாவது, விண்வெளி பயணத்திற்கு எதற்காக விமானிகளை தேர்வு செய்கின்றனர் என என்றாவது யோசித்ததுண்டா?
விமானப்படை
விண்வெளிக்கும், விமானப்படைக்கும் இருக்கும் தொடர்பு
ஷுக்லா, சர்மா மட்டுமல்ல, இந்திய வம்சாவளியைக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் கூட அமெரிக்க கடற்படையில் விமானியாக இருந்தார்; மறைந்த விண்வெளி வீரர் கல்பனா சாவ்லா, ஒரு சிவிலியன் விமானி.
இதுமட்டுமல்ல, முதல் மனிதராக விண்வெளிக்கு சென்ற யூரி ககாரின், நாசாவின் முதல் விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட் - இருவரும் விமானிகள்.
இதன் மூலம் பெரும்பாலான விண்வெளி வீரர்கள் விமானிகள் என்பது வரலாற்றிலிருந்து தெளிவாகிறது.
காரணம்
ஏன் விமானிகள் விண்வெளிக்கு அனுப்பப்படுகிறார்கள்?
விண்வெளிப் பயணத்தின் தொடக்க காலத்தில் விண்வெளி என்பது வானத்தின் நீட்சி என்றும், ராக்கெட்டுகள் அதன் அடுத்த கட்ட வளர்ச்சி என்றும் கருதப்பட்டது.
அதனால், அதிக அழுத்தத்தையும் வேகத்தையும் தாங்கி பழகிய போர் விமானிகள், விண்வெளிக்குப் பொருத்தமானவர்களாக கருதப்பட்டனர்.
விமானிகளுக்கு உள்ள முக்கியமான திறன்களும் அதற்கு காரணம்:
உடல் சக்தி:5-9G முடுக்கங்களை தாங்கும் பயிற்சி
மனச்சிறப்புகள்: சூழ்நிலை விழிப்புணர்வு, விரைவான முடிவெடுப்பு
தொழில்நுட்பத் திறமை: பல உபகரணங்களை ஒரே நேரத்தில் கண்காணிக்கும் திறன்
அவசரநிலை மேலாண்மை: விமானத்தில் பழகிய அவசரநிலை மேலாண்மை, விண்வெளியிலும் உயிர் காக்க உதவும்.
காலப்போக்கில் விண்வெளி பயணங்கள், விஞ்ஞான ரீதியான நோக்கங்களை நோக்கி மாறியதால், அறிவியல், பொறியியல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் உள்ள நபர்களும் விண்வெளி வீரர்களாக தேர்ந்தெடுக்கப்படத் தொடங்கினர்.