NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சந்திரயான் 3: என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கும்.. திட்டச் சுருக்கம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரயான் 3: என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கும்.. திட்டச் சுருக்கம்!
    சந்திரயான் 3 திட்டச் சுருக்கம்

    சந்திரயான் 3: என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கும்.. திட்டச் சுருக்கம்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 23, 2023
    10:50 am

    செய்தி முன்னோட்டம்

    நான்கு வருடங்களாக இந்தியர்கள் அனைவரும் காத்திருந்த தருணம் இன்று நிறைவேறவிருக்கிறது. 2019 சந்திரயான் 2வின் தோல்விக்கு பின்பு செலுத்தப்பட்ட சந்திரயான்-3 இன்று நிலவில் தரையிறங்கவிருக்கிறகு.

    இன்று மாலை, 6.04 மணிக்கு சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கவிருக்கும் நிலையில், சந்திரயான்-3 ஏவப்பட்டத்தில் இருந்து தற்போது வரை நடைபெற்ற நிகழ்வுகள், சந்திரயான்-3 திட்டத்தின் இலக்கு, ஆகியவற்றின் சிறிய தொகுப்பு தான் இது.

    கடந்த ஜூலை 14, நண்பகல் 2.35 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான்-3.

    ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே பூமிக்கும் நிலவுக்கு இடையிலான தூரம் குறைவாக இருக்கும் என்பதனால், இந்த மாதத்தில் சந்திரயான்-3யை ஏவத் திட்டமிடப்பட்டது.

    சந்திரயான் 3

    இஸ்ரோவின் தொடர் நடவடிக்கைகள்: 

    விண்ணில் ஏவப்பட்ட பிறகு, பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து வெளியேறுவது முதல் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைவது வரை, இஸ்ரோ மேற்கொண்ட சந்திரயான்-3யின் செயல்பாடுகள் அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன.

    ஆகஸ்ட் 1-ம் தேதி பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து வெளியேறி, ஆகஸ்ட் 5-ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைக்கப்பட்டது சந்திரயான் 3.

    அதனைத் தொடர்ந்து, சந்திரயான் 3யின் சுற்று வட்டப்பாதையின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு, ஆகஸ்ட் 17-ம் தேதி ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து தனியாகப் பிரிந்தது லேண்டர் மாடியூல்.

    பின்னர் லேண்டர் மாடியூலையும், நிலவுக்கு மிக நெருக்கமான 25x134 கிமீ சுற்று வட்டப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலைநிறுத்தியது இஸ்ரோ.

    சந்திரயான் 3

    சந்திரயான் 3 திட்டத்தின் இலக்கு: 

    சந்திரயான் 3 திட்டத்தின் முதன்மையான இலக்குகள் இரண்டு தான். ஒன்று நிலவின் தென்துருவப் பகுதியில் மென் தரையிறக்கத்தை சாத்தியப்படுத்துவது. மற்றொன்று, நிலவின் மேற்பரப்பில் நம்முடைய ரோவரை இயக்குவது.

    இந்தத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரஞ்யான் என்று பெயர் சூட்டியிருக்கிறது இஸ்ரோ.

    சந்திரயான் 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டரையே, இந்தத் திட்டத்திற்கும் பயன்படுத்துகிறது இஸ்ரோ. எனவே, சந்திரயான் 3 திட்டத்தில் தனியாக ஆர்பிட்டர் அனுப்பபடவில்லை.

    மேற்கூறிய இலக்குகளைத் தவிர்த்து, லேண்டர் மற்றும் ரோவருடன் அனுப்பப்பட்டிருக்கும் அறிவியல் உபகரணங்களைக் கொண்டு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வதும் இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய இலக்கு.

    இதற்காக லேண்டரில் நான்கு, ரோவர் இரண்டு மற்றும் ப்ரொபல்ஷன் மாடியூலில் ஒரு அறிவியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

    சந்திரயான் 3

    இந்த முறை தவறு நடக்க வாய்ப்புகள் இருக்கிறதா? 

    சந்திரயான் 2வில் ஏற்பட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, சந்திரயான் 3யை வடிவமைத்திருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

    இன்று மாலை 5.45-க்கு சந்திரயான் 3-யின் தரையிறக்கம் தொடங்கி, 6.04 மணிக்கு சந்திரயான் 3 தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு வேளை, லேண்டரில் உள்ள சென்சார்கள் மற்றும் பிற உபகரணங்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும், தரையிறக்கத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கும் வகையிலேயே சந்திரயான் 3 வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோ தலைவர்.

    இன்று தரையிறக்க முடியாத சூழல் நிலவும் பட்சத்தில் நாளை மீண்டும் தரையிறக்க வகையில் மாற்றுத் திட்டங்களும் தயார் நிலையில் வைத்திருக்கிறது இஸ்ரோ.

    சந்திரயான் 3

    தரையிறங்கவில்லை என்றால் என்ன ஆகும்? 

    ஒரு வேளை இன்று தரையிறங்க முடியாத பட்சத்தில் விக்ரம் லேண்டரானது, தற்போது நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் அதே 25x134கிமீ சுற்று வட்டப்பாதையிலேயே வலம் வந்து கொண்டிருக்கும்.

    சந்திரயான் 2வானது தரையிறக்கத்தின் போது, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு நிலவில் மோதியே தோல்வியடைந்தது. ஆனால், எந்த சூழ்நிலையிலும் நிலவில் மோதாத வகையில் சந்திரயான் 3 திட்டமிடப்பட்டிருக்கிறது.

    இன்றும், நாளையும் தரையிறக்கம் செய்ய முடியவில்லை என்றாலும், அதற்கடுத்தும் தொடர்ந்து நிலவில் தரையிறக்கத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், தொடர்ந்து மென் தரையிறக்கத்தை சாத்தியப்படுத்த இஸ்ரோ முயற்சிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்து, மற்றொரு சாதனையைப் படைக்க இஸ்ரோவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நமது நன்றிகளும், வாழ்த்துக்களும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான் 3
    இஸ்ரோ
    விண்வெளி
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான்
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்

    இஸ்ரோ

    சந்திரன் மற்றும் சூரியனுக்கு விண்கலங்களைச் செலுத்தும் இஸ்ரோ.. என்னென்ன திட்டங்கள்? விண்வெளி
    இன்று விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இஸ்ரோவின் 'NVS-01' செயற்கைகோள்! செயற்கைகோள்
    'சந்திராயன்-3 ஜூலையில் ஏவப்படும்': இஸ்ரோ தலைவர் இந்தியா
    குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான புது அறிவிப்புகள்  தூத்துக்குடி

    விண்வெளி

    சந்திராயன்-3 திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இஸ்ரோ
    வேற்றுகிரக விண்வெளிப் பொருட்களைக் கண்டறிந்த ஹார்வார்டு ஆராய்ச்சியாளர்கள் அறிவியல்
    சந்திராயன்-2 மற்றும் சந்திராயன்-3 திட்டங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன? இஸ்ரோ
    சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ இஸ்ரோ

    இந்தியா

    இந்தியாவில் வீடு வாங்க ஏற்ற நகரம் எது? நைட் ஃபிராங்க் நிறுவனம் அறிக்கை வீட்டு கடன்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 18 தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவில் மேலும் 9 சூப்பர் கம்யூட்டர்களை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தொழில்நுட்பம்
    யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக் மல்யுத்தம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025