NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை கொண்ட ஐந்தாவது நாடாக மாறுகிறது இந்தியா; டிசம்பருக்குள் அறிமுகம் செய்ய திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை கொண்ட ஐந்தாவது நாடாக மாறுகிறது இந்தியா; டிசம்பருக்குள் அறிமுகம் செய்ய திட்டம்
    ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை கொண்ட ஐந்தாவது நாடாக மாறுகிறது இந்தியா

    ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை கொண்ட ஐந்தாவது நாடாக மாறுகிறது இந்தியா; டிசம்பருக்குள் அறிமுகம் செய்ய திட்டம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 04, 2024
    12:01 pm

    செய்தி முன்னோட்டம்

    2030ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடையும் லட்சிய திட்டத்தைக் கொண்டுள்ள இந்திய ரயில்வே, அதன் ஒரு படியாக ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்களை நோக்கி மிகப்பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது.

    இந்திய ரயில்வே தனது முதல் முன்மாதிரி ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை வடக்கு ரயில்வே பிரிவில் இயக்க திட்டமிட்டுள்ளது.

    இதன்படி டிசம்பர் 2024இல் வடக்கு ரயில்வே மண்டலத்தில் ஹரியானாவில் உள்ள சோனிபட்-ஜிண்ட் இடையே இயக்கப்பட உள்ளது.

    இந்த நடவடிக்கை இந்தியாவின் பசுமையான போக்குவரத்து அமைப்பிற்கு மாறுவதற்கான குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக உள்ளது.

    ஹைட்ரஜன் ஃபார் ஹெரிடேஜ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஹைட்ரஜன் ரயில்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    திட்டம்

    ஹைட்ரஜன் ஃபார் ஹெரிடேஜ் திட்டம்

    ஹைட்ரஜன் ஃபார் ஹெரிடேஜ் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக பாரம்பரிய வழித்தடங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் 35 ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ரயில்கள் முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளைப் பயன்படுத்தி பூஜ்ஜிய உமிழ்வை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கும்.

    இந்திய ரயில்வேயின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான போக்குவரத்து இலக்குகளை அடைய இந்த முயற்சி உதவும். ஹைட்ரஜன் ரயில்களுடன், மற்ற சுற்றுச்சூழல் திட்டங்களுடன் ஆற்றல் திறனை அதிகரிப்பதை இந்திய ரயில்வே நோக்கமாகக் கொண்டுள்ளது.

    HOG (ஹெட் ஆன் ஜெனரேஷன்) தொழில்நுட்பம் மற்றும் ரயிலில் பயன்படுத்தப்படும் எல்இடி விளக்கு ஆகியவை ஆற்றல் செயல்திறனை ஆதரிக்கும் பிற புதுமையான தீர்வுகளில் அடங்கும்.

    சென்னை

    சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிப்பு

    ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மேற்பார்வையில் சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரியில் ரயில் தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாக மூத்த ரயில் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

    இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இயக்கப்படும் 35 ரயில்கள் மாதேரன்-ஹில் ரயில்வே, டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே, கல்கா-சிம்லா ரயில், காங்க்ரா பள்ளத்தாக்கு மற்றும் நீலகிரி மலை ரயில் ஆகியவற்றின் வழித்தடங்களில் இயக்கப்படும் எனத் தெரிகிறது.

    வெற்றிகரமான சோதனைகளைத் தொடர்ந்து, நவீன தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவின் கலாச்சார மரபு ஆகியவற்றின் கலவையை வழங்கும் இந்த வழித்தடங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இயக்கப்படும் எதிர்பார்க்கப்படுகின்றன.

    இதன் மூலம், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களைக் கொண்ட நாடாக இந்தியா மாறும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ரயில்வே
    ரயில்கள்
    மத்திய அரசு
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு

    இந்திய ரயில்வே

    இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன? ரயில்கள்
    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல் திருநாள்
    புக் செய்த ட்ரெயின் டிக்கெட்டின் தேதியை மாற்ற வேண்டுமா? விவரம் உள்ளே ரயில்கள்
    அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு ரயில்கள்

    ரயில்கள்

    ஜார்க்கண்டில் பயணிகள் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டது; மீட்பு பணிகள் தீவிரம் ஜார்கண்ட்
    கவலையை தூண்டும் 2024 இன் தொடர் ரயில் விபத்துகள்: ஓர் பார்வை  விபத்து
    வில்லிவாக்கம் - காட்பாடி; வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நிறைவு மெட்ரோ
    இந்தியாவில் முதல்முறையாக தேசிய வீட்டுப் பயண கணக்கெடுப்பை 2025இல் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு இந்தியா

    மத்திய அரசு

    எரிபொருள் விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது வணிகம்
    ஆந்திரா, தெலுங்கானா வெள்ள பாதிப்பு; உடனடி நிவாரணமாக ரூ.3,448 கோடி வழங்குவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு ஆந்திரா
    குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம் குரங்கம்மை
    54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு ஒப்பந்தங்களுக்கான வரிவிதிப்பில் புதிய முடிவு ஜிஎஸ்டி

    தொழில்நுட்பம்

    டெக் அப்டேட்: விரைவில் வாட்ஸ்அப் செயலிக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் தனி தீம் வாட்ஸ்அப்
    யூடியூப் கணக்கு ஹேக் செய்யப்படுவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் புதிய கருவியை அறிமுகம் செய்தது கூகுள் யூடியூப்
    ராஷ்டிரிய விஞ்ஞான புரஸ்கார்: தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேராசியர்களுக்கு விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் விருது விழா
    இந்தியா போஸ்ட் பெயரில் எஸ்எம்எஸ்ஸா? எச்சரிக்கையாக இருங்கள்; PIB அலெர்ட் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025