NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / விண்ணில் ஏவப்படவிருக்கும் உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்! 
    விண்ணில் ஏவப்படவிருக்கும் உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்! 
    1/2
    தொழில்நுட்பம் 1 நிமிட வாசிப்பு

    விண்ணில் ஏவப்படவிருக்கும் உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 17, 2023
    02:39 pm
    விண்ணில் ஏவப்படவிருக்கும் உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்! 
    விண்ணில் செலுத்தப்படவிருக்கும் ஸ்பேஸ்X-ன் ஸ்டார்ஷிப் ராக்கெட்

    தங்களது நீண்ட நெடிய விண்வெளிப் பயணத்தின் முதல் அடியை இன்று எடுத்து வைக்கவிருக்கிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்X நிறுவனம். உலகின் பெரிய மற்றும் சக்திவாய்ந்த ஸ்டார்ஷிப் (Starship) ராக்கெட்டை இன்று மாலை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கிறது ஸ்பேஸ்X. அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையை விட உயரமாக இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டை முழுமையாக மறுபயன்பாட்டிற்கு பயன்படுத்துவம் வகையில் உருவாக்க முயற்சி செய்து வருகிறது ஸ்பேஸ்X நிறுவனம். இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு விண்ணில் செலுத்தவிருக்கும் இந்த ராக்கெட்டை வைத்து தான், சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை கொண்டு செல்லவும் திட்டமிட்டிருக்கிறார் எலான் மஸ்க். குறைந்தபட்சம் மூன்று முறையாவது இந்த வகை ராக்கெட்டை மறுபயன்பாடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    2/2

    உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்: 

    இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டால், விண்வெளியில் செலுத்தப்பட்ட உலகின் சக்திவாய்ந்த ராக்கெட் என்ற பெயரைப் பெறும். நாசாவின் ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டத்தை விட இரண்டு மடங்கு சக்திவாய்ந்ததாக இதனை உருவாக்கியிருக்கிறது ஸ்பேஸ்X. இந்த ராக்கெட்டானது வடிவமைக்கப்பட்ட பிறகு முதல்முறையாக தற்போது தான் விண்ணில் ஏவப்படவிருக்கிறது. முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுமா அல்லது முதல் அடி தோல்வியில் முடியுமா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த முயற்சியில் இருந்து இந்த ராக்கெட் குறித்த பல தகவல்களை, தரவுகளை நாங்கள் தெரிந்து கொள்வோம், எனத் தெரிவித்திருக்கிறார் ஸ்பேஸ்X நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். 2025-ல் நாசாவின் ஆர்டிமிஸ்-3 திட்டத்தில் இந்த ராக்கெட் மூலமாகவே மனிதர்களை மீண்டும் நிலவுக்குக் கூட்டிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    விண்வெளி
    எலான் மஸ்க்

    விண்வெளி

    வியாழனை ஆய்வு செய்ய விண்கலம்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஐரோப்பா! உலகம்
    600 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸியை படம்பிடித்த நாசா! நாசா
    ஆர்ட்டெமிஸ்- 2 விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிவித்த நாசா! நாசா
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை இஸ்ரோ

    எலான் மஸ்க்

    இனி 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம் - வெளியான புதிய அம்சம்!  ட்விட்டர்
    ஊழியர்கள் சிறை செல்வார்கள்... இந்திய சட்டங்கள் குறித்து எலான் மஸ்க் பதில்!  தொழில்நுட்பம்
    இந்த தேதி முதல் 'ப்ளூ டிக்' நீக்கப்படும்.. எலான் மஸ்க் ட்வீட்!  ட்விட்டர்
    எலான் மஸ்க் மீது முன்னாள் ஊழியர்கள் வழக்கு! ட்விட்டர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023