NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வாட்ஸ்அப்பில் நிதி தொடர்பான எஸ்எம்எஸ்களைத் தடை செய்ய ரிசர்வ் வங்கியிடம் ஏர்டெல் வலியுறுத்தல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாட்ஸ்அப்பில் நிதி தொடர்பான எஸ்எம்எஸ்களைத் தடை செய்ய ரிசர்வ் வங்கியிடம் ஏர்டெல் வலியுறுத்தல்
    வாட்ஸ்அப்பில் நிதி தொடர்பான எஸ்எம்எஸ்களைத் தடை செய்ய ஆர்பிஐயிடம் ஏர்டெல் வலியுறுத்தல்

    வாட்ஸ்அப்பில் நிதி தொடர்பான எஸ்எம்எஸ்களைத் தடை செய்ய ரிசர்வ் வங்கியிடம் ஏர்டெல் வலியுறுத்தல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 09, 2025
    11:59 am

    செய்தி முன்னோட்டம்

    வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வாட்ஸ்அப் போன்ற ஓவர்-தி-டாப் (ஓடிடி) தளங்கள் மூலம் பரிவர்த்தனை தொடர்பான செய்திகளை அனுப்புவதைத் தடை செய்யுமாறு தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், இந்திய ரிசர்வ் வங்கியிடம் (ஆர்பிஐ) முறையிட்டுள்ளது.

    சைபர் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளைக் காரணமாகக் கூறி இந்த கோரிக்கையை வைத்துள்ளது.

    ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு ஒரு முறையான கடிதத்தில், ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல், ஓடிடி தளங்களில் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளின் ஒழுங்குமுறை பாதுகாப்புகள் மற்றும் கண்டறியும் தன்மை இல்லாததால் அவை மோசடிக்கு ஆளாகின்றன என்று எச்சரித்தார்.

    ஓடிடி சேனல்கள் மூலம் பகிரப்படும் மோசடி இணைப்புகளைக் கண்டறிந்து இடைமறிப்பது கடினம், இது பயனர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்று ஏர்டெல் கவலை தெரிவித்தது.

    தொலைத்தொடர்புத் துறை

    தொலைத்தொடர்புத் துறையுடன் ஒப்பிட்டு விளக்கம்

    தொலைத்தொடர்பு சேவைகளைப் போலல்லாமல், ஓடிடி தளங்கள் தரவு இறையாண்மை, குறியாக்கம் மற்றும் ஒழுங்குமுறை அணுகல் தொடர்பான கடுமையான விதிமுறைகளுக்குக் கட்டுப்படவில்லை என்பதையும் நிறுவனம் சுட்டிக்காட்டியது.

    குறிப்பாக, இவை அனைத்தும் பாதுகாப்பான நிதித் தொடர்புகளுக்கான முக்கியமான கூறுகள் ஆகும்.

    ஓடிடி சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தொலைத்தொடர்பு கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்கான நிதி நிறுவனங்களிடையே வளர்ந்து வரும் போக்கை எடுத்துரைத்த ஏர்டெல், இது ஒழுங்குமுறை மேற்பார்வையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் நுகர்வோருக்கு ஆபத்துகளை அதிகரிக்கிறது என்று வாதிட்டது.

    தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான உயர் பாதுகாப்பு தரங்களை வழங்குகின்றன என்பதை ஏர்டெல் வலியுறுத்தி உள்ளது.

    சைபர் கிரைம்

    சைபர் கிரைம் மோசடிகளைத் தடுக்க ஆர்பிஐ எடுத்து வரும் நடவடிக்கை

    ரிசர்வ் வங்கியின் தற்போதைய டிஜிட்டல் கட்டண அங்கீகார ஆலோசனைகளுக்கு ஏர்டெல் ஆதரவு தெரிவித்ததுடன், பாதுகாப்பான தகவல் தொடர்பு நடைமுறைகளை உறுதி செய்வதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதில் உதவுவதாகவும் முன்வந்தது.

    நிதி மோசடியில் பயன்படுத்தப்படும் மியூல் கணக்குகளைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான அமைப்பான MuleHunter.ai போன்ற ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப முயற்சிகளை அந்தக் கடிதம் பாராட்டியது.

    டிஜிட்டல் குற்றங்களைத் தடுப்பதில் இத்தகைய கண்டுபிடிப்புகள் மிக முக்கியமானவை என்று கூறுகிறது.

    பொது மற்றும் தனியார் வங்கிகள் இரண்டும் ஏர்டெல்லின் திட்டங்களுக்கு சாதகமாக பதிலளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாட்ஸ்அப்
    ஏர்டெல்
    ரிசர்வ் வங்கி
    ஆர்பிஐ

    சமீபத்திய

    வாட்ஸ்அப்பில் நிதி தொடர்பான எஸ்எம்எஸ்களைத் தடை செய்ய ரிசர்வ் வங்கியிடம் ஏர்டெல் வலியுறுத்தல் வாட்ஸ்அப்
    Zomato, Swiggy நிறுவனங்களுக்கு போட்டியாக சிறிய உணவகங்களுக்கு உதவும் வகையில் ரேபிடோவின் புதிய திட்டம் ரேபிடோ
    சென்னை - பெங்களூர் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் தொடக்கம் சென்னை
    தொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை; இன்றைய (ஜூன் 9) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை

    வாட்ஸ்அப்

    செல்ஃபி ஸ்டிக்கர் அம்சம்: பயனர்களுக்கு சூப்பரான அம்சத்தை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப் மெட்டா
    வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கையின் ₹213 கோடி அபராதத்திற்கு எதிரான மெட்டாவின் மேல்முறையீடு ஏற்பு மெட்டா
    ஸ்டேட்டஸ் அப்டேட்டில் இனி மியூசிக்கையும் சேர்க்கலாம்; வாட்ஸ்அப்பின் புது அம்சம் மெட்டா
    வாட்ஸ்அப்பின் புதிய அம்சம் மூலம், ஸ்டேட்டஸ் அப்டேட்களில் மியூசிக்கை சேர்க்கலாம்! தொழில்நுட்பம்

    ஏர்டெல்

    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ
    5ஜி டேட்டாவுடன் ஏர்டெல்லின் அட்டகாசமான திட்டங்கள் இங்கே! தொழில்நுட்பம்
    அன்லிமிடெட் 5G சேவை வழங்கும் ஏர்டெல்லின் புதிய பிளான்கள்!  மொபைல்

    ரிசர்வ் வங்கி

    புதிய RBI அம்சத்தின் மூலம் RTGS, NEFT பரிவர்த்தனைகள் இப்போதும் மேலும் பாதுகாக்கப்படுகிறது ஆர்பிஐ
    இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு $640.279 பில்லியனாக குறைவு; ஆர்பிஐ தகவல் இந்தியா
    அமெரிக்க தேர்தலுக்கு பிறகு சரிவு எதிரொலி; 8 டன் தங்கத்தை கையிருப்பில் சேர்த்தது ரிசர்வ் வங்கி இந்தியா
    பலமான அமெரிக்க வேலை வாய்ப்பு தரவுகளுக்கு மத்தியில் ரூபாய் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத சரிவு இந்தியா

    ஆர்பிஐ

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சி இந்தியா
    இந்திய ரூபாயில் எல்லை தாண்டிய வெளிநாட்டு பரிவர்த்தனைகளை அதிகரிக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை ரிசர்வ் வங்கி
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறாவது வாரமாக கடும் சரிவு இந்தியா
    பட்ஜெட்டுக்கு முன்னதாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது பணவீக்கம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025