NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / இந்தியாவில் உள்ள இந்த  Bioluminescent அல்லது ஒளிரும் கடற்கரைகளை பற்றி தெரியுமா? 
    இந்தியாவில் உள்ள இந்த  Bioluminescent அல்லது ஒளிரும் கடற்கரைகளை பற்றி தெரியுமா? 
    வாழ்க்கை

    இந்தியாவில் உள்ள இந்த  Bioluminescent அல்லது ஒளிரும் கடற்கரைகளை பற்றி தெரியுமா? 

    எழுதியவர் Venkatalakshmi V
    April 27, 2023 | 08:43 am 1 நிமிட வாசிப்பு
    இந்தியாவில் உள்ள இந்த  Bioluminescent அல்லது ஒளிரும் கடற்கரைகளை பற்றி தெரியுமா? 
    இந்தியாவில் உள்ள ஒளிரும் கடற்கரைகளுக்கு தவறாமல் விசிட் செய்யுங்கள்

    பயோலுமினென்சென்ஸ்(bioluminescence) என்பது ஒரு இயற்கை நிகழ்வாகும். கடலில் வாழும், ஜெல்லிமீன்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், பிளாங்க்டன் மற்றும் பாசிகள் போன்ற உயிரினங்கள், இரசாயன எதிர்வினைகள் மூலம் ஒளியை உருவாக்கும் இயற்கையான நிகழ்வாகும். இரவில், நிலவின் ஒளியில், அழகான வெள்ளை முத்துக்கள் போல கடல் நீர் பிரகாசிக்கும், ஒரு மாயாஜால உலகத்தில் இருப்பது போல, நீங்கள் உணருவீர்கள். இந்தியாவில் இது போல, பல பயோலுமினசென்ட் கடற்கரைகள் உள்ளன. அவற்றின் பட்டியல் இதோ: கோவாவில் உள்ள பெடல்பாடிம் பீச்: அழகான கடற்கறைகளுக்கு பெயர் பெற்ற கோவாவில் உள்ள இந்த பெட்டால்பாடிம் கடற்கரை, அதன் அழகிய வெள்ளை மணல் மற்றும் அழகான சன்செட்டிற்கு அறியப்படுகிறது. இங்கு டால்பின்களையும் காணலாம்.

    ஒளிரும் கடற்கரைகள் 

    கர்நாடகாவில் உள்ள மட்டு பீச்: கர்நாடகாவின் உடுப்பியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மட்டு பீச், கடல்வாழ் உயிரினங்களால் அவ்வப்போது இரவில் ஒளிரும். 30 கிலோமீட்டருக்கு மேல் நீண்டு இருக்கும் இந்த பீச்சில், நீங்கள் சன்ரைஸ், சன்செட், நடைப்பயிற்சி மற்றும் போன்றவற்றில் ஈடுபடலாம். அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் உள்ள ஹேவ்லாக் தீவு: அந்தமானில் உள்ள ஹேவ்லாக் தீவு சுற்றுலாப் பயணிகளை, இந்த பயோலுமினென்சென்ஸ் என்ற அதியசம் நிகழும்போது, கடல்நீர் வழியே பயணிக்கவும் அனுமதிக்கிறது என கூறுகிறார்கள். இந்த நிகழ்வைக் காண, நவம்பர் முதல் ஜனவரி வரை சுற்றுலா பயணிகள் அதிகம் கூடுகிறார்கள். சென்னை பெசன்ட் நகர் பீச்: முதன்முதலில், 2019ஆம் ஆண்டில் தான், பெசன்ட்நகர் கடற்கரையில், இந்த அற்புத நிகழ்வை கண்டுபிடித்தனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கடற்கரை
    சுற்றுலா

    கடற்கரை

    தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம்  தமிழ்நாடு
    கோடைவிடுமுறைக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, இந்தியாவின் அழகிய 'நீல' கடற்கரைகள்  பயணம்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்

    சுற்றுலா

    லீவு விட்டாச்சு..கையை கடிக்காத ஃபாரின் டூர் போலாமா? பயணம்
    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜா  தமிழ்நாடு
    இந்தோனேசியாவிற்கு சுற்றுலா செல்லும்பொழுது, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் பயணம்
    தமிழகத்தில் குறைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! காரணம் என்ன? தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023