NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி ஒரு பார்வை
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி ஒரு பார்வை

    நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி ஒரு பார்வை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 01, 2024
    11:36 am

    செய்தி முன்னோட்டம்

    மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகியவை திங்கள்கிழமை நாடு முழுவதும் அமலுக்கு வந்தன.

    இந்தச் சட்டங்கள் முறையே காலனித்துவ கால இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றும்.

    இந்த சட்டங்கள் கூறுவது என்ன என்பதையும் அவற்றின் கீழ் வழங்கப்படும் தண்டனைகளை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

    சட்ட திருத்தங்கள்

    பாரதிய நியாய சந்ஹிதா

    பாரதிய நியாய சன்ஹிதாவில் 358 பிரிவுகள் உள்ளன (ஐபிசியின் 511 பிரிவுகளுக்கு பதிலாக). சன்ஹிதாவில் மொத்தம் 20 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    மேலும் 33 குற்றங்களுக்கான சிறைத்தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதோடு, 83 குற்றங்களில் அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதுடன், 23 குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    பாரதிய நியாய சன்ஹிதா, பாலியல் குற்றங்களைக் கையாள்வதற்காக 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்' என்ற தலைப்பில் புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    மேலும் 18 வயதுக்குட்பட்ட பெண்களை கற்பழிப்பது தொடர்பான விதிகளில் மாற்றங்களையும் இந்த சட்டம் முன்மொழிந்துள்ளது.

    18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

    பெண் பாதுகாப்பு

    பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சன்ஹிதா

    பாரதிய நியாய சன்ஹிதாவில், 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்யும் புதிய குற்றப் பிரிவு மற்றும் கூட்டுப் பலாத்காரம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும், குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

    மோசடியான முறையில் உடலுறவில் ஈடுபடும் நபர்களுக்கு அல்லது திருமணம் செய்து கொள்வதற்கான உண்மையான நோக்கமின்றி, திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கும் நபர்களுக்கும் இந்த புதிய சட்டம் தண்டனைகளை வழங்குகிறது.

    பாரதீய நியாய சன்ஹிதாவில் முதன்முறையாக பயங்கரவாத செயல்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

    சன்ஹிதாவில், பயங்கரவாத செயல்களுக்கு மரண தண்டனை அல்லது பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

    சன்ஹிதாவில் பலவிதமான பயங்கரவாத குற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, பொது வசதிகள் அல்லது தனியார் சொத்துக்களை அழிப்பது ஒரு குற்றம்.

    எஃப்ஐஆர்

    மாற்றம் செய்யப்பட்ட எஃப்ஐஆர் விதிகள்

    இந்த புதிய சட்டத்தில், பூஜ்ஜிய எஃப்ஐஆர் பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தபட்டுள்ளது, அதாவது குற்றம் நடந்த பகுதியைப் பொருட்படுத்தாமல், எஃப்ஐஆர் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யப்படலாம்.

    இதில், பாதிக்கப்பட்டவர் எப்ஐஆரின் நகலை இலவசமாகப் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து பாதிக்கப்பட்டவருக்கு 90 நாட்களுக்குள் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து பாதிக்கப்பட்டவருக்கு 90 நாட்களுக்குள் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு நபர் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை. மின்னஞ்சல் அல்லது ஆப் மூலமாக ஆன்லைன் புகார் அளிக்கலாம்.

    தனிநபர் கைது செய்யப்படும்போது, தனக்கு தெரிந்த நபருக்கு உடனடியாக அதை பற்றிய தகவலை அளிக்க புதிய சட்டம், உரிமை வழங்குகிறது.

    நீதிமன்ற வழக்குகள்

    தேங்கி நிற்கும் வழக்குகளை குறைக்க ஒரு செக்

    புதிய சட்டங்களின் ஒரு பகுதியாக, ஒரு வழக்கில் நீதிமன்றங்கள் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

    இதனால் பலகாலம் வழக்கின் விசாரணை இழுத்தடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

    மேலும், மருத்துவ அலட்சியத்தால் உயிரிழப்புகள் நேரும்போது அதற்குக் காரணமாக இருந்த மருத்துவருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

    எனினும் இந்த சட்டத்திற்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சட்டம்
    சட்டம் பேசுவோம்
    குற்றவியல் நிகழ்வு
    பாலியல் வன்கொடுமை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சட்டம்

    சிறார் பலாத்காரத்திற்கு மரண தண்டனை, ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது, இன்னும் பல: புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பம்சங்கள் கிரிமினல் சட்டங்கள்
    புதிய குற்றவியல் சட்டங்கள் மூலமாக மருத்துவர்களுக்கு கிடைக்கப்போகும் பாதுகாப்பு குற்றவியல் நிகழ்வு
    வேலை நேரத்திற்குப் பிறகு முதலாளிகளின் அழைப்பை புறக்கணிக்க உரிமை: ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம் ஆஸ்திரேலியா
    பிரபல சட்ட அறிஞர் ஃபாலி எஸ் நாரிமன் தனது 95வது வயதில் காலமானார் உச்ச நீதிமன்றம்

    சட்டம் பேசுவோம்

    சட்டம் பேசுவோம்: ஈவ் டீசிங்கிற்கு எதிரான இந்திய சட்டங்களின் பட்டியல் இந்தியா
    சட்டம் பேசுவோம்: புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள் இந்தியா
    சட்டம் பேசுவோம்: பதின் பருவ உடலுறவை குற்றமற்றதாக்குவது குறித்து விவாதிக்கும் உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    சட்டம் பேசுவோம்: திருமண-பலாத்காரத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இல்லையா? இந்தியா

    குற்றவியல் நிகழ்வு

    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  இந்தியா
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  இந்தியா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா

    பாலியல் வன்கொடுமை

    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது  மணிப்பூர்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்
    பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மிஸ்.யூனிவெர்ஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இந்தோனேசியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025