NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / நவராத்திரி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவராத்திரி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
    நவராத்திரி முதல் துர்கா பூஜை வரை, இந்த திருவிழாவிற்கு பல பெயர்கள் உள்ளன

    நவராத்திரி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 01, 2024
    07:21 am

    செய்தி முன்னோட்டம்

    பண்டிகை காலம் வந்துவிட்டது. நாடு முழுவதும், நவராத்திரி வெகு விமரிசையாகக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

    நவராத்திரி முதல் துர்கா பூஜை வரை, இந்த திருவிழாவிற்கு பல பெயர்கள் உள்ளன.

    ஆனால் அனைத்திற்குமே ஒரே ஒரு நோக்கம்-மகிழ்ச்சி மற்றும் மக்கள் தங்கள் சொந்தங்களுடனும் உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கழிப்பது தான்.

    நவராத்திரி என்பது ஒன்பது இரவுகள் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் சக்தி தேவியை வழிபடுவது வழக்கம்.

    இந்த பண்டிகை நாடு முழுவதும், வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாடப்பட்டாலும், அதற்கு வெவ்வேறு பெயர்கள் மற்றும் சடங்குகள் உள்ளன.

    தனிப்பட்ட மரபுகள் மற்றும் புராணங்களை ஒன்றிணைத்து, நவராத்திரி நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களைக் காண்கிறது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம்.

    தென் இந்தியா

    தென் இந்தியாவில் எப்படி கொண்டாடப்படுகிறது?

    நவராத்திரியின் போது தென்னிந்தியாவின் முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்று கொலு - வீடுகளில் அடுக்கி வைக்கப்படும் பல்வேறு பொம்மைகள் மற்றும் உருவங்களின் கண்காட்சி.

    இது இந்தியாவின் தென் மாநிலங்களில் பல்வேறு பெயர்களுடன் அழைக்கப்படுகிறது.

    கர்நாடகாவில் கொலுவை பாம்பே ஹப்பா என்றும், தமிழ்நாட்டில் பொம்மை கொலு என்றும் அழைக்கப்படுகிறது.

    கேரளா இதை பொம்மா குல்லு என்றும், ஆந்திராவில் பொம்மலா கொலுவு என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    மக்கள் பெரிய ஊர்வலங்களில் ஈடுபட்டு தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.

    வட இந்தியா

    வட இந்தியாவில் எப்படி கொண்டாடப்படுகிறது?

    ராமர் ராவணனை வென்றதை வட இந்தியா கொண்டாடுகிறது.

    மனைவி சீதா மற்றும் சகோதரர் லட்சுமணனுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு ராமர் அயோத்திக்கு திரும்பியதையும் இது கொண்டாடுகிறது.

    இனிப்புகள், உணவுப் பொருட்களுடன் திருவிழா கொண்டாடப்படுகிறது.

    பெண்கள் விரதம் கடைப்பிடித்து பூஜை செய்து இரவில் விழாக்களில் ஈடுபடுவார்கள்.

    கிழக்கு இந்தியா

    கிழக்கு இந்தியாவில் எப்படி கொண்டாடப்படுகிறது?

    கிழக்கு இந்தியாவில், முக்கியமாக மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், நவராத்திரி துர்கா பூஜை என்று அழைக்கப்படுகிறது.

    துர்கா தேவி மகிஷாசுரனை வென்றதை மக்கள் கொண்டாடுகிறார்கள். பெண்கள் வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் அலங்கரித்து கொள்வார்கள்.

    மேலும் நகரங்கள் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    மஹாளய நாளிலிருந்து பிஜோய தசமி நாள் வரை, சிலைகள் தண்ணீரில் மூழ்கி, அடுத்த ஆண்டுக்கான காத்திருப்பு தொடங்கும் போது மக்கள் திருவிழாவின் தொடக்கத்தை அனுபவிக்கிறார்கள்.

    மேற்கு இந்தியா

    மேற்கு இந்தியாவில் எப்படி கொண்டாடப்படுகிறது?

    மேற்கு இந்தியாவில், குறிப்பாக குஜராத்தில், நவராத்திரி முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும்.

    சக்தி தேவியை வழிபட பெண்கள் பகலில் விரதம் இருப்பார்கள்.

    அவர்கள் தங்கள் வீடுகளை அலங்கரித்து, அருகிலுள்ள கோவிலுக்குச் செல்கிறார்கள்.

    இரவில், ஆண்களும் பெண்களும் தாண்டியாக்களுடன் நடனமாடும் குஜராத்தின் பாரம்பரிய நடனமான கர்பாவின் பெரிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நவராத்திரி
    பண்டிகை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    நவராத்திரி

    நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  திருவிழா
    நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள் கோவில்கள்
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதத்தின் போது சாப்பிடக்கூடாத உணவுகள்  உணவு குறிப்புகள்
    மேற்கு வங்காளத்தில், நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ பிரேசில்

    பண்டிகை

    'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி  நரேந்திர மோடி
    100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன? தமிழ்நாடு
    ஆயுத பூஜை கொண்டாட்டம் - சென்னையிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்  சென்னை
    தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025