ஆரோக்கியமான பப்பாளி லாலிபாப் செய்வது எப்படி
தற்போது ஊரெங்கும் பல்வேறு வகையான காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல், பறவை காய்ச்சல் என தொடங்கி ஏதேதோ பெயர் தெரியாத காய்ச்சல் வரப்போவதாக கூட உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இதை நிலையில், நமது உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை வளர்ப்பது அவசியமாகிறது. நாம் தினசரி உண்ணும் உணவில், அதிகமாக பச்சை காய்கறிகள், பழங்கள் சேர்ப்பது மிக அவசியம். குறிப்பாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தருவது கட்டாயம். அந்த வகையில், நம் வீட்டிலேயே வளரக்கூடிய பப்பாளி பழம், ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. பப்பாளி பழங்கள், காய், இலைகள் என அனைத்துமே உண்ணக்கூடியவையே. அந்த வகையில் இன்று, பப்பாளி லாலிபாப் செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
1 கப் - பச்சை பப்பாளி (துருவியது) 3/4 கப் - உருளைக்கிழங்கு (வேகவைத்து, மசித்தது) 1- வெங்காயம் - (சிறியதாக நறுக்கியது) 1 டீஸ்பூன் - மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன் - கரம் மசாலா 1 டீஸ்பூன் - கொத்தமல்லி இலை 1 டீஸ்பூன் - இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் - சோள மாவு தேவையானஅளவு - ரஸ்க் துண்டுகள் தேவையான அளவு- உப்பு, எண்ணெய்
செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்து கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில், பிசைந்த உருளைக்கிழங்கு, துருவிய பப்பாளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் கொத்தமல்லியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் அவற்றை சிறு உருடைகளாக உருட்டிக்கொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்தில், சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து, உருண்டைகளை சோள மாவு கரைசலில் தோய்த்து, ரஸ்க் துண்டுகளில் பிரட்டி கொள்ளவும். பின்னர் இந்த உருண்டைகளை எண்ணெயில், பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பொறித்த உருண்டைகளில் டூத்பிக் துளைத்து சாஸூடன் சேர்த்து சூடாக பரிமாறவும். உங்கள் வீடு குட்டிஸ் இன்னும் வேண்டும் என கேட்பார்கள்