NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை
    மல்யுத்த வீரர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2023
    02:08 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் நேற்று பலமுறை கோரிக்கை விடுத்தும் சட்டத்தை மீறினர், அதனால்தான் டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டது என்று டெல்லி காவல்துறை இன்று(மே 29) தெரிவித்துள்ளது.

    டெல்லியில் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர்கள், நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    தேசிய தலைநகரில் உள்ள புதிய நாடாளுமன்றத்திற்கு நேற்று பேரணியாக சென்று கொண்டிருந்த மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் முரட்டுத்தனமாக கையாள்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

    "ஜனநாயகத்தின் கோவில்" என்று அழைக்கப்படும் புதிய நாடாளுமன்றத்தில் இருந்து வெறும் இரண்டு கிமீ தொலைவில், மகளிர் தடகள வீராங்கனைகள் இப்படி கொடூரமாக நடத்தப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

    details

     புது டெல்லி காவல்துறை துணை ஆணையர்  ட்வீட் 

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறையினர், இந்தியாவின் தலை சிறந்த விளையாட்டு வீரர்களை கைது செய்த போது, பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தில் தான் இருந்தார் என்று சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    கலவரத்தை தூண்டியதாகவும், சட்டவிரோத கூட்டத்தை நடத்தியதாகவும், பொது ஊழியர்களின் கடமையை செய்ய விடாமல் தடுத்ததாகவும் மல்யுத்த வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புது டெல்லி காவல்துறை துணை ஆணையர் "எதிர்காலத்தில் மல்யுத்த வீரர்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கோரி விண்ணப்பித்தால், ஜந்தர் மந்தரைத் தவிர வேறு எந்த பொருத்தமான, அறிவிக்கப்பட்ட இடங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள்" என்று இன்று ட்வீட் செய்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா

    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  டெல்லி
    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்  டெல்லி
    ஜூன் மாதம் இந்தியா வருகிறார் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு துறை
    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்  மு.க ஸ்டாலின்

    டெல்லி

    டெல்லி மெட்ரோவில் 'ஆபாசமாக' உடை அணிந்து சென்ற பெண் பேட்டி இந்தியா
    இண்டிகோ: போதையில் விமான அவசர கதவை திறக்க முயற்சித்த விமான பயணி இந்தியா
    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா
    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025