NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை
    மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை
    இந்தியா

    மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2023 | 02:08 pm 0 நிமிட வாசிப்பு
    மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை
    மல்யுத்த வீரர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் நேற்று பலமுறை கோரிக்கை விடுத்தும் சட்டத்தை மீறினர், அதனால்தான் டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டது என்று டெல்லி காவல்துறை இன்று(மே 29) தெரிவித்துள்ளது. டெல்லியில் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர்கள், நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தேசிய தலைநகரில் உள்ள புதிய நாடாளுமன்றத்திற்கு நேற்று பேரணியாக சென்று கொண்டிருந்த மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் முரட்டுத்தனமாக கையாள்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. "ஜனநாயகத்தின் கோவில்" என்று அழைக்கப்படும் புதிய நாடாளுமன்றத்தில் இருந்து வெறும் இரண்டு கிமீ தொலைவில், மகளிர் தடகள வீராங்கனைகள் இப்படி கொடூரமாக நடத்தப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

     புது டெல்லி காவல்துறை துணை ஆணையர்  ட்வீட் 

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறையினர், இந்தியாவின் தலை சிறந்த விளையாட்டு வீரர்களை கைது செய்த போது, பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தில் தான் இருந்தார் என்று சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். கலவரத்தை தூண்டியதாகவும், சட்டவிரோத கூட்டத்தை நடத்தியதாகவும், பொது ஊழியர்களின் கடமையை செய்ய விடாமல் தடுத்ததாகவும் மல்யுத்த வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், புது டெல்லி காவல்துறை துணை ஆணையர் "எதிர்காலத்தில் மல்யுத்த வீரர்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கோரி விண்ணப்பித்தால், ஜந்தர் மந்தரைத் தவிர வேறு எந்த பொருத்தமான, அறிவிக்கப்பட்ட இடங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள்" என்று இன்று ட்வீட் செய்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    டெல்லி

    இந்தியா

    'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி! மல்யுத்த போட்டி
    மணிப்பூரில் தொடரும் வன்முறை: அமித்ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்  உள்துறை
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு கொரோனா
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு

    டெல்லி

    டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது - முதல்வர் ஸ்டாலின் கண்டனம் மு.க ஸ்டாலின்
    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்  இந்தியா
    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023