NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து 

    மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 05, 2024
    09:28 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவைத் தேர்தலில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றதைத் தொடர்ந்து பாஜக கூட்டணி இந்தியாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

    இதனையடுத்து, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜூன் 8ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்தியாவில் ஆட்சியைத் தக்கவைத்து கொள்ளும் இரண்டாவது பிரதமர் மோடி ஆவார்.

    இந்நிலையில், அவருக்கு உலக தலைவர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

    2024 லோக்சபா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.

    2024 லோக்சபா தேர்தலில் வெற்றிபெற பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் பைடனும் தனியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்

    இந்தியா 

    கொரிய பிரதமர் யூன் சுக் யோல் வாழ்த்து 

    "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காகவும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் வாக்களித்த கிட்டத்தட்ட 650 மில்லியன் வாக்காளர்களுக்கும் வாழ்த்துகள். வரம்பற்ற சாத்தியக்கூறுகளின் பகிரப்பட்ட எதிர்காலத்தை நாம் திறக்கும்போதுதான் நமது நாடுகளுக்கிடையேயான நட்பு வளர்கிறது." என்று அதிபர் பைடன் ட்வீட் செய்துள்ளார்.

    ஹிரோஷிமாவில் இருக்கும் கொரிய பிரதமர் யூன் சுக் யோல் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

    "இந்திய மக்களின் பரந்த ஆதரவுடன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். உங்கள் சிறந்த தலைமையின் மீது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த முடிவு காட்டுகிறது. இந்திய-கொரிய உறவுகளை ஆழப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்நோக்குகிறோம்." என்று யூன் சுக் யோல் கூறியுள்ளார்.

    இந்தியா 

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து 

    2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    "பொதுத் தேர்தலில் இந்திய மக்கள் கட்சி வெற்றி பெற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ரஷ்யா-இந்தியாவின் நட்பு பாரம்பரிய பரஸ்பர நன்மை பயக்கும் என நான் நம்புகிறேன். நிச்சயமாக, நீங்களும் நானும் இருதரப்பு மற்றும் சர்வதேச நிகழ்ச்சி நிரலில் தற்போதைய பிரச்சினைகளில் ஆக்கபூர்வமான கூட்டுப் பணிகளைத் தொடர்வோம் என்று நம்புகிறேன். உங்கள் அரசாங்க நடவடிக்கைகளில் புதிய வெற்றிகளையும், நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பையும் நீங்கள் பெற நான் மனதார வாழ்த்துகிறேன்." என்று அதிபர் புடின் கூறியுள்ளார்.

    இந்தியா 

    'நமது தொடர்ச்சியான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்': UAE அதிபர் 

    துடிப்பான தேர்தல் களத்தை அமைத்த இந்திய மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது ட்விட்டர் பதிவில், "எனது நண்பரான பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை மேலும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு இட்டுச் சென்று அவர் அதிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆழமாக வேரூன்றிய மூலோபாய கூட்டாண்மையை அனுபவிக்கவும் நமது நாடுகள் மற்றும் நமது மக்களின் முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட நமது தொடர்ச்சியான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்." என்று கூறியுள்ளார்.

    இந்தியா 

    'உலக பிரச்சனைகளை சமாளிக்க நமது கண்டங்கள் ஒத்துழைக்க வேண்டும்': சார்லஸ் மைக்கேல்

    ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், "உலகின் மிகப்பெரிய தேர்தலான இந்தியாவின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவுடனான எங்களது மூலோபாய கூட்டாண்மையை தொடர்ந்து ஆழப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் எதிர்நோக்குகிறது. காலநிலை மாற்றம், அமைதி & பாதுகாப்பு மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட மிக அழுத்தமான உலகளாவிய சவால்களுக்கு நமது கண்டங்கள் ஒத்துழைக்க வேண்டும்." என்று ட்வீட் செய்துள்ளார்.

    இதற்கிடையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இன்னும் சில நேரத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து நரேந்திர மோடியின் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி
    பாஜக
    ஜோ பைடன்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    டெல்லியில் 47.4 டிகிரி வெப்பம், கேரளாவுக்கு ரெட் அலெர்ட்: இன்றைய வானிலை நிலவரம்  வானிலை அறிக்கை
    வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்தது பெங்களூரு விமான நிலையம்   பெங்களூர்
    மும்பை: எமிரேட்ஸ் விமானம் மீது மோதியதால் 36 ஃபிளமிங்கோக்கள் பலி மும்பை
    ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி ஜார்ஜியா

    பிரதமர் மோடி

    கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து கச்சத்தீவு
    4 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பிரதமர்
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம் பிரதமர்
    பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ஹமாஸ் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேல் நாட்டவர்  இந்தியா

    பாஜக

    போராடுவேன், வெற்றி பெறுவேன், மீண்டும் கட்சிக்கு செல்வேன்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கேஎஸ் ஈஸ்வரப்பா கர்நாடகா
    சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ்
     அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  காங்கிரஸ்
    'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் பிரதமர் மோடி

    ஜோ பைடன்

    காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை ஹமாஸ்
    ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன? இஸ்ரேல்
    காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி காசா
    காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025