NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்: ஒரு அலசல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்: ஒரு அலசல்
    ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்: ஒரு அலசல்

    ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்: ஒரு அலசல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 22, 2023
    09:19 am

    செய்தி முன்னோட்டம்

    லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் 'நாரி சக்தி வந்தன் ஆதினியம்' அல்லது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் 215-0 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

    புதன்கிழமை மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன.

    கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் 27 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மசோதாவுக்கு புத்துயிர் அளித்து இந்த வாரம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    பாரதிய ஜனதா கட்சியும் (பாஜக) காங்கிரஸும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக இழுபறியில் ஈடுபட்டாலும், இந்தச் சாதனை ஆளும் பாஜகவிற்கு, வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு சாதகமாகவே இருக்கும்

    card 2

    காங்கிரசால் கொண்டுவரப்பட்ட மசோதா

    இந்த மசோதா முதலில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது, அது இரு அவைகளிலும் நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்தது.

    சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) உள்ளிட்ட கட்சிகள், இந்த மசோதாவை பல ஆண்டுகளாக எதிர்த்து வந்தன.

    இந்நிலையில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை இந்த முறை மாற்றியதால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது .

    2010ல் இந்த மசோதாவை எதிர்த்த SP, இம்முறை அதை ஆதரித்தது. எனினும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு துணை ஒதுக்கீட்டுக்கான கோரிக்கைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    card 3

    2010ல் என்ன நடந்தது?

    2010 ஆம் ஆண்டில், ராஜ்யசபாவில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 186 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் பெற்று, பலத்த விவாதத்திற்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.

    இரண்டு சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் அப்போதைய தலைவர் ஹமீத் அன்சாரியின் மேஜை மீது ஏறினர். சமாஜ்வாதி கட்சியின் நான்கு எம்.பி.க்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் முன்னாள் லோக் ஜனசக்தி கட்சி (எல்.ஜே.பி.) ஆகியவற்றின் தலா ஒருவரும், கண்டிக்கத்தக்க நடத்தை காரணமாக அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    அவர்களை தொடர்ந்து எஸ்பி மற்றும் ஆர்ஜேடி எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் 12 பிஎஸ்பி எம்பிக்களும் வாக்களிப்பில் இருந்து வெளியேறினர்.

    card 4

    2029 -இல் நடைமுறைக்கு வருமா இந்த இட ஒதுக்கீடு மசோதா?

    தற்போது ஏகமனதாக நிறைவேற்ற பட்ட இந்த மசோதா நடைமுறைக்கு வர சில காலம் ஆகும் என ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம்.

    2027-ல் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகுதான் பெண்கள் ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்.

    எனவே, 2029ம் ஆண்டு வரை இந்த மசோதா அமலுக்கு வராமல் போகலாம்.

    தற்போது லோக்சபாவில் 82 பெண் எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 24 பெண் எம்.பி.க்களும் உள்ளனர்.

    எனினும், பெண்களுக்கான இடஒதுக்கீடு, மாநிலங்களவை மற்றும் மாநில சட்ட மேலவைகளுக்கு நீட்டிக்கப்படாமல், கீழ்சபை மற்றும் சட்டப் பேரவைகளுக்கு மட்டுமே நீட்டிக்கப்படும் என செய்திகள் கூறுகின்றன.

    card 5

    மற்ற நாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன?

    உலகளவில், அரசியலில் அதிக பெண் பிரதிநிதித்துவம் கொண்ட நாடுகளான ஸ்வீடன்(46%), தென்னாப்பிரிக்கா (45%), ஆஸ்திரேலியா (38%), பிரான்ஸ்(35%) மற்றும் ஜெர்மனி(35%) போன்ற நாடுகளில் இட ஒதுக்கீடு இல்லை.

    வங்கதேசம் 300 நாடாளுமன்ற இடங்களில் 50 இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது, தற்போது 21% பெண் எம்.பி.க்கள் உள்ளனர்.

    எரித்திரியா, ருவாண்டா மற்றும் தான்சானியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளும் இதே போன்ற ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.

    பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் 185 நாடுகளில், இந்தியா 141 வது இடத்தில் உள்ளது.

    இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) 42% பெண் எம்பிக்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) 39% உள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு 14% வாக்குகள் கிடைத்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாநிலங்களவை
    மகளிர் இடஒதுக்கீடு மசோதா

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    மாநிலங்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா

    'மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது': சோனியா காந்தி  காங்கிரஸ்
    மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய விதிகள்: முழு விவரம்  இந்தியா
    இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம்: காங்கிரஸை வழி நடத்துகிறார் சோனியா காந்தி இந்தியா
    "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் OBCக்களும் சேர்க்கப்பட வேண்டும்": சோனியா காந்தி நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025