NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் பொன்முடியின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்தமனம் எழுதிய உயர் நீதிமன்ற தீர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் பொன்முடியின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்தமனம் எழுதிய உயர் நீதிமன்ற தீர்ப்பு
    அமைச்சர் பொன்முடியின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்தமனம் எழுதிய உயர் நீதிமன்ற தீர்ப்பு

    அமைச்சர் பொன்முடியின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்தமனம் எழுதிய உயர் நீதிமன்ற தீர்ப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 22, 2023
    08:35 am

    செய்தி முன்னோட்டம்

    தற்போதைய ஆளும் திமுக அரசின் மூத்த அமைச்சரும் உயர்கல்வி துறை அமைச்சருமான பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

    கடந்த 2016 ஆம் ஆண்டு, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், முதலில், நிரபராதி என இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பு எழுதப்பட்டது.

    எனினும் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்தார்.

    card 2

    குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் 

    கடந்த 19ஆம் தேதி இவர்களின் விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதியரசர், நேற்று இவர்களின் தண்டனை விவரங்களை வெளியிட்டார்.

    அதன்படி, அமைச்சர் பொன்முடி குற்றவாளி எனவும், வருமானவரி ஏய்ப்பு செய்ததால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    அவருடன், பொன்முடியின் மனைவி விசாலாட்சியும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார், இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்.

    card 3

    அஸ்தமனமாகிறது பொன்முடியின் அரசியல் வாழ்க்கை

    உயர்நீதிமன்ற தீர்ப்பின் விளைவாக அவரின் எம்.எல்.ஏ. பதவியை இழக்கிறார்.

    அதோடு, தண்டனை காலத்துக்குப் பின் 6 ஆண்டுகள் பொன்முடி தேர்தலில் போட்டியிடவும் முடியாது.

    கடந்த 2006 - 2011 ஆண்டுகளில் திமுக ஆட்சியின் போதும், உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி.

    அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி மீதும், கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

    card 4

    பொன்முடியின் அரசியல் வாழ்க்கை:

    அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் டி.எடையார் கிராமத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர், தெய்வசிகாமணி ஆகும்.

    ஆகஸ்ட் 19, 1950ஆம் ஆண்டு பிறந்த பொன்முடி, வரலாறு, அரசியல் மற்றும் பொதுத்துறை நிர்வாகம் ஆகிய துறையில் முதுநிலைப் பட்டமும், வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

    அதோடு இவர் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், கட்சியினரால், இனமான இளய பேராசிரியர் என குறிப்பிடப்படுபவர்.

    திமுகவின் ஆரம்ப காலங்களில் இருந்து கட்சியில் முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.

    அந்த வகையில் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராவார் பொன்முடி.

    ஆரம்ப காலங்களில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து போட்டியிட்டு வந்த பொன்முடி, கடந்த 2016ஆம் ஆண்டு முதல், திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடத்துவங்கினார்.

    card 5

    பொன்முடியின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்?

    அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமின்றி, இருவருக்கும் தலா ரூ50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    எனினும் இந்த 3 ஆண்டு சிறை தண்டனையானது மேல்முறையீட்டுக்காக 1 மாதம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதன் பின்னர் விழுப்புரம் நீதிமன்றத்தில் பொன்முடி, விசாலாட்சி இருவரும் சரணடைய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து பொன்முடியின் வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக கூறினார்.

    இந்த சூழலில், அமைச்சர் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை உள்ளிட்டவை மூத்த அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்த பரிந்துரைகளை மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு செய்த நிலையில், ஆளுநர் இவைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரசியல் நிகழ்வு
    திமுக
    உயர்கல்வித்துறை
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அரசியல் நிகழ்வு

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! தமிழ்நாடு
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்! இந்தியா

    திமுக

    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்
    'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு  பாஜக
    துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம்- முதல்வர் ஸ்டாலின் அதிமுக
    முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த 'நீட் விலக்கு நம் இலக்கு' இயக்கத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை தமிழ்நாடு

    உயர்கல்வித்துறை

    பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் தமிழ்நாடு
    2023-24 கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி  தமிழக அரசு
    அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம் திமுக
    தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருக்கும் அமைச்சர் பொன்முடி ஆர்.என்.ரவி

    சென்னை உயர் நீதிமன்றம்

    384வது சென்னை தினம் - வரலாற்று சிறப்புகள் ஓர் பார்வை சென்னை
    இனி மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஈரோடு
    செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தும் உயர் நீதிமன்றம் தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025