NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா-சீனா போரால் காதலியை இழந்த ரத்தன் டாடா; திருமணம் செய்யாததன் பின்னணி இதுதான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா-சீனா போரால் காதலியை இழந்த ரத்தன் டாடா; திருமணம் செய்யாததன் பின்னணி இதுதான்
    இந்தியா-சீனா போரால் காதலியை இழந்த ரத்தன் டாடா

    இந்தியா-சீனா போரால் காதலியை இழந்த ரத்தன் டாடா; திருமணம் செய்யாததன் பின்னணி இதுதான்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 10, 2024
    01:01 pm

    செய்தி முன்னோட்டம்

    டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா புதன்கிழமை (அக்டோபர் 9) இரவு மும்பை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 86.

    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சால்ட் டு சாப்ட்வேர் குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா, கடந்த திங்கட்கிழமை முதல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    முன்னதாக, 2020இல் ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பேக்கு அவர் அளித்த நேர்காணலில், தனது குழந்தைப் பருவத்தின் ஆரம்ப நாள், பெற்றோரின் விவாகரத்து மற்றும் அவர் கிட்டத்தட்ட திருமணம் வரை சென்று தடைபட்டது ஆகியவற்றைப் பற்றி நீண்ட நேரம் பேசிய விஷயங்கள் பேசியிருந்தார்.

    குழந்தைப் பருவம்

    பாட்டியின் வளர்ப்பில் ரத்தன் டாடா

    தனது குழந்தைப் பருவம் குறித்து ரத்தன் டாடா கூறுகையில், "எனக்கு மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் இருந்தது.

    ஆனால் நானும் என் சகோதரனும் வளர்ந்துவிட்டதால், எங்கள் பெற்றோரின் விவாகரத்து காரணமாக நாங்கள் சில ராகிங் மற்றும் தனிப்பட்ட அசௌகரியங்களை எதிர்கொண்டோம்.

    அந்த நாட்களில் விவாகரத்து இன்று போல் இல்லை. ஆனால் என் பாட்டி எங்களை எல்லா வகையிலும் நன்றாக வளர்த்தார். என் அம்மா மறுமணம் செய்து கொண்ட உடனேயே, பள்ளியில் உள்ள பையன்கள் எங்களைப் பற்றி மோசமாக பேசத் தொடங்கினர்.

    அது எங்களுக்கு ஆக்ரோஷத்தைத் தூண்டினாலும், எங்கள் பாட்டி எந்த நேரத்திலும் கண்ணியத்தைத் தக்க வைத்துக் கொள்ள கற்றுக் கொடுத்தார். அந்த மதிப்பு இன்று வரை என்னுடன் இருக்கிறது." என்றார்.

    திருமணம்

    கிட்டத்தட்ட கல்யாணம் வரை சென்று தடைபட்டது ஏன்

    தனது திருமணம் குறித்து பேசிய ரத்தன் டாடா, கட்டிடக்கலையில் பட்டம் பெற்ற பிறகு, முதலில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததாகவும், அங்கு ஒரு பெண்ணை காதலித்து கிட்டத்தட்ட திருமணம் வரை சென்றதாகவும் கூறினார்.

    ஆனால் அதே நேரத்தில், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த தன் பாட்டியை விட்டு விலகியிருந்ததால், தற்காலிகமாக இந்தியா திரும்ப முடிவு செய்ததாக தெரிவித்த ரத்தன் டாடா, காதலியும் தன்னுடன் இந்தியா வருவார் என எதிர்பார்த்ததாகக் கூறினார்.

    எனினும், 1962 இந்தியா-சீனா போரின் காரணமாக, தனது காதலியின் பெற்றோருக்கு இதில் உடன்பாடு இல்லாததால், அந்த உறவு முறிந்ததாகக் கூறியுள்ளார்.

    அதன் பின்னர் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரத்தன் டாடா
    டாடா
    திருமணம்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    ரத்தன் டாடா

    "ரத்தன் டாடா ஜி என்னுடைய தனிப்பட்ட ஹீரோ": ரத்தன் டாடா மறைவிற்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன் கமல்ஹாசன்
    ரத்தன் டாடா மறைவுக்குப் பின் டாடா குழுமத்தை வழிநடத்தப் போவது யார்? சூடுபிடித்த வாரிசு விவாதம் டாடா

    டாடா

    இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச்சேவை வழங்க விரும்பும் பெருநிறுவனங்கள் அமேசான்
    ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனமாகவிருக்கும் டாடா ஆப்பிள்
    69 வயதில் சக்தி வாய்ந்த போர் விமானத்தை இயக்கிய ரத்தன் டாடா வணிகம்
    வரும் மாதங்களில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கும் டாடா டாடா மோட்டார்ஸ்

    திருமணம்

    சிம்பிளாக நடந்து முடிந்த நடிகர் ஜெயராம் மகளின் திருமணம்: வைரலாகும் போட்டோஸ்  நடிகர்
    கோலிவுட்டில் விவகாரத்தை நோக்கி செல்லும் மற்றொரு ஸ்டார் ஜோடி ஜிவி பிரகாஷ் குமார்
    ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது மும்பை
    சல்மான் கானை திருமணம் செய்ய அவரது பண்ணை வீட்டுக்கு சென்ற ரசிகை; இப்போது போலீஸ் காவலில்! சல்மான் கான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025